முன்னாள் முதல்வர் கலைஞருக்கு ரூ.39 கோடி மதிப்பில் நினைவிடம் – முக ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அவரின் சாதனைகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காமராஜர் சாலையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கலைஞர் நினைவிடம் :
தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து சட்டமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெற்று 5 முறை தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்துள்ளார். 50 ஆண்டு காலம் திமுகவின் தலைவராக இருந்தவர் கருணாநிதி. இவர் முதல்வராக இருந்த காலத்தில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து அதை தொடர்ந்து நடைமுறைபடுத்தினார். அவர் ஆட்சிக்கு வந்த போது நான் முதலமைச்சராக கோட்டையில் இருந்தாலும், குடிசைகளை பற்றியே சிந்திப்பேன் என்று கூறினார்.
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
இவரது ஆட்சி காலத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர், மகளிருக்கு சொத்தில் சம உரிமை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், சென்னை தரமணியில் டைடல் பார்க் என பல நலத்திட்டங்களை கொண்டு வந்தார். கருணாநிதி ஒரு சிறந்த எழுத்தாளரும் கூட. இவரது பணிகள் எண்ணிலடங்காதவை. இவர் உடல் நலக்குறைவால் கடந்த 2018ம் ஆண்டு உயிரிழந்தார். இவரை தொடர்ந்து அவரது மகன் முக ஸ்டாலின் தொடர்ந்து கட்சி பணிகளை மேற்கொண்டார். கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் தமிழகத்தின் முன்னாள் கருணாநிதி அவர்களின் சாதனைகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காமராஜர் சாலையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110வது விதியின் கீழ் அறிவித்தார். நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கருணாநிதி என்றும் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.