Post Office இல் தினமும் ரூ.1400 முதலீடு செய்தால் ரூ.35 லட்சம் ரிட்டன்ஸ் – சூப்பரான சேமிப்பு திட்டம்!
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளது. இந்த திட்டங்களில் சேமிப்பதன் மூலமாக 2 மடங்கு லாபத்தை பெற முடிகிறது. இதனை தொடர்ந்து தற்போது கிராம சுரக்ஷா திட்டத்தில் கிடைக்க கூடிய பலன்களை விரிவாக பார்ப்போம்.
சேமிப்பு திட்டம்
இந்திய அஞ்சல் துறையில் குறைந்த காலத்தில் அதிக லாபம் தரும் வகையில் பொது வருங்கால வைப்பு நிதி, மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம், செல்வ மகள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான சேமிப்பு திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டங்களில் பெரும்பாலானோர் தங்களின் சேமிப்பு பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். ஏனெனில் வங்கிகளை காட்டிலும் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் இரட்டிப்பு பலன்களை பெற முடிகிறது. அத்துடன் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவதால் சேமிப்பு பணத்திற்கு முழு பாதுகாப்பும் கிடைக்கிறது.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து அஞ்சல் அலுவலகத்தில் உள்ள கிராம் சுரக்ஷா திட்டத்தை பற்றி பார்ப்போம். இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக 19 மற்றும் அதிகபட்சமாக 55 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அத்துடன் இதில் ரூ.10,000 முதல் ரூ.10 லட்சம் வரை முதலீடு செலுத்தலாம். இந்த திட்டத்தில் மாதந்தோறும், காலாண்டு, 6 மாதம் மற்றும் 1 ஆண்டு வரை என பிரீமியங்களை செலுத்த முடியும். இதையடுத்து இந்த திட்டத்தில் பிரீமியம் செலுத்த முடியவில்லையெனில் 30 நாட்கள் வரை கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும்.
மேலும் இந்த திட்டத்தின் கீழ் 19 வயதுடைய நபர் ஒவ்வொரு மாதமும் ரூ.1515 பிரீமியம் தொகையை செலுத்த வேண்டும். அதன்படி 55 வயதை எட்டும் போது வட்டி கணக்கிடப்பட்டு ரூ.31.60 லட்சம் வரை பெற முடியும். இதே போல் நீங்கள் 58 வயது வரை முதலீடு செய்தால் மாதம் ரூ.1463 முதலீடு செய்தால் போதுமானது. இதையடுத்து முதிர்வு காலத்தின் முடிவில் ரூ.33.40 லட்சம் வரை சேமிக்க முடியும். இதனை தொடர்ந்து 60 வயது வரை சேமிக்க நினைத்தால் ரூ.1411 மாதந்தோறும் செலுத்த வேண்டியிருக்கும். அதன்படி முதிர்வு காலத்தில் ரூ.34.60 லட்சம் வரை சேமிக்க முடியும். இந்த திட்டம் முதிர்வு காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.