தமிழகத்தில் ரோந்து போலீசாருக்கு ரூ.300 சிறப்பு சலுகை – மாதம் 2 நாள் விடுமுறை! முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ரூ.300 வரை சிறப்பு சலுகை வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதே போல சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு மாதந்தோறும் 2 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு சலுகை
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தவிர ஊதிய உயர்வு உட்பட பல்வேறு சலுகைகளை வலியுறுத்தி அரசுக்கு சில கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், இப்போது காவல்துறையினருக்கான புதிய அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழக சட்டசபையில் தற்போது 2022ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில், இன்று (மே.10) காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் சட்டசபை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் முக ஸ்டாலின், இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் முதல் காவல் ஆய்வாளர் வரையுள்ளவர்களுக்கு சிறப்பு படியாக மாதந்தோறும் 300 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் 15 நாட்களுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் உதவி ஆய்வாளர்களுக்கு மாதந்தோறும் 2 நாட்கள் வரைக்கும் விடுமுறை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய முதல்வர், ‘தமிழகத்தில் புதிதாக 3000 காவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும், குற்ற சம்பவங்களை கையாளுவதற்கு சென்னையில் கூடுதலாக 3 மண்டலங்களில் போக்குவரத்து கண்காணிப்பு மண்டலங்கள் அமைக்கப்படும். காவலர்களுக்கு இடர்படி தொகை உயர்த்தி வழங்கவும், காவல் ஆய்வாளர்களுக்கான காப்பீட்டுத் தொகையை ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.60 லட்சமாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இரவு ரோந்து பணிக்கு செல்லும் போலீசார் மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு மாதந்தோறும் ரூ.300 சிறப்பு படி வழங்கப்படும்.
ரேஷன் கார்டுதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – கோதுமை விநியோகம் நிறுத்தம்!
அதே போல, இதுவரை போலீசாருக்கு வார விடுமுறை மட்டும் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், இனி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும் 15 நாட்களுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் மாதம் 2 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்படும். இந்த விடுமுறை மூலம் 10,508 பேர் பலனடைவார்கள். இதனுடன், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பரிதாபகரமாக உயிரிழக்கும் சம்பவங்களை கண்டறிய மாநில குற்றப்பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு துறை கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.