குறைந்த மதிப்புள்ள UPI Payments, Rupay debit cards மேம்படுத்த சூப்பரான திட்டம் – அமைச்சரவை ஒப்புதல்!!
நாட்டில் தற்போது UPI மூலமாக பண பரிமாற்றம் அதிகமான அளவு செய்யப்பட்டு வருகிறது. இதில் தற்போது குறைவான அளவு மதிப்புள்ள UPI Payments, Rupay debit cards அதிகமாக பயன்படுத்த சூப்பரான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனை
நாட்டில் தற்போது அனைத்து துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது அதிகமாக நடைமுறையில் உள்ளது. இதிலும் குறிப்பாக UPI மூலமாக எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஒருவருக்கொருவர் பணத்தை பரிமாற்றம் செய்து வருகின்றனர்.
Follow our Twitter Page for More Latest News Updates
இந்த நிலையில் நாட்டில் தற்போது குறைந்த மதிப்புள்ள பரிமாற்றம் மற்றும் Rupay debit cards ஆகியவற்றை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மத்திய அமைச்சரவை ரூ.2600 கோடி மதிப்பிலான ஊக்கத்தொகை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூபே டெபிட் கார்டுகளின் பயன்பாட்டை மேம்படுத்துவது மற்றும் குறைந்த மதிப்புள்ள BHIM-UPI பரிவர்த்தனைகளை ஊக்கப்படுத்த சலுகைகள் வழங்கப்படும்.
SSC JE தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – Paper – 2 தேர்வு தேதி அறிவிப்பு!
இந்த திட்டத்தின் கீழ் 2022-23 ம் நிதியாண்டிற்கான பாயின்ட்-ஆஃப்-சேல் (PoS) மற்றும் இ-காமர்ஸ் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக வங்கிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அரசு சார்பாக வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.