மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.25 லட்சம் – ஜாக்பாட் அறிவிப்பு!
கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக அரசு ஊழியர்களுக்கு புதிய வீடு கட்டுவதற்கு வங்கியில் வீட்டுக் கடன் பெற்றால் அவர்களுக்கு முன்பண சலுகையை மத்திய அரசு வழங்கி வருகிறது. தற்போது இந்த திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.
வீட்டுக்கடன்:
மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி தற்போது 31% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது பல்வேறு சலுகைகளை அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கி வருகிறது. மேலும் 2020ஆம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி அன்று மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்கு முன்பணம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் படி பணியாளர் சொந்தமாகவோ, அல்லது மனைவியின் பெயரிலோ வீடு கட்ட முன்பணம் பெற்று கொள்ளலாம்.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
மேலும் இந்த திட்டத்தின் மூலமாக புதிய வீடு கட்டுவதற்கு அல்லது பிளாட் வாங்குவதற்கு முன்பாக வங்கியில் வீட்டுக் கடன் பெற்றிருந்தால் அந்த கடனை திருப்பி செலுத்த வீடு கட்டும் முன்பண சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகை நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கும் வழங்கப்படுகிறது. ஆனால் முக்கிய நிபந்தனை என்னவென்றால் தற்காலிக ஊழியர்கள் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். இந்த முன்பணமானது வங்கியில் கடன் வாங்கிய நாளில் இருந்து கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை 34 மாதங்கள் வரை அல்லது அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை பெற்றுக் கொள்ளலாம்.
ஆனால் இந்த திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் தொகையானது ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை பொறுத்து தொகை மாறுபடுகிறது. மேலும் வீட்டை விரிவாக்கம் செய்ய அல்லது புதுப்பிக்க விரும்பினாலும் வீடு கட்டும் முன்பண சலுகை விதிகளின்படி மத்திய அரசு ஊழியர்கள் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் அல்லது 34 மாத அடிப்படை சம்பளத்தை பெற்று கொள்ளலாம். இதில் 2020ஆம் ஆண்டு முதல் இந்த முன்பண தொகைக்கு 7.9% ஆக வழங்கப்பட்டு வருகிறது. இதனை தற்போது 7.1% ஆக குறைத்துள்ளது. மேலும் இதனை வருகிற 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.