எல்பிஜி சிலிண்டருக்கு ரூபாய் 200 மானியம் – யார் யாரெல்லாம் வாங்க முடியும் தெரியுமா?
நாளுக்கு நாள் எல்பிஜி சிலிண்டரின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர் வாங்கி வரும் பயனாளர்கள் மட்டுமே எல்பிஜி சிலிண்டருக்கான ரூபாய் 200 மானியம் பெற முடியும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிலிண்டருக்கான மானியம்:
மத்திய அரசு தற்போது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. அதைப்போல எல்பிஜி சிலிண்டரின் விலையையும் குறைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே எல்பிஜி சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் மத்திய அரசு, வர்த்தக சிலிண்டருக்கான விலையை மட்டுமே குறைத்துள்ளது. மே மாதத்தில் வீட்டில் பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டரின் விலை குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
Exams Daily Mobile App Download
மேலும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச இணைப்புகளை பெற்றவர்களுக்கும், 9 கோடி ஏழை பெண்கள் பெற்ற இணைப்புகளுக்கு மட்டுமே 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் இணையாத பொதுமக்கள் சந்தை விற்பனை விலையில் தான் எல்பிஜி சிலிண்டர் வாங்கி பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலகட்டத்திலிருந்தே எல்பிஜி சிலிண்டர் பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படவில்லை. இதன் பின்பு உஜ்வாலா திட்டத்தின் கீழ் இணைந்துள்ள ஏழை மக்களுக்கு மட்டுமே மானியம் அளிக்கப்பட உள்ளதாக ஏற்கனவே மத்திய இணை துணை செயலாளர் பங்கைச் ஜெயின் தெரிவித்திருந்தார்.
Post Office இல் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – ரூ.2,500 வரை வருமானம் தரும் சேமிப்பு திட்டம்!
பின்பு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 7 ரூபாய் குறைப்பதாகவும், டீசல் மீதான கலால் வரியை ரூபாய் ஆறு வரைக்கும் குறைப்பதாகவும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன் பெற்று வரும் ஏழை எளிய மக்களுக்கு ஒரு ஆண்டில் 12 சிலிண்டருக்கு தலா 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் எனவும் அறிவித்து இருந்தார். ஏழை எளிய மக்களின் எல்பிஜி சிலிண்டருக்கு ரூபாய் 200 மானியம் பெற்று வருவதால் ஒன்றிய அரசுக்கு மட்டுமே 6 ஆயிரத்து 500 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.