தமிழகத்தில் பொதுமக்களின் வங்கி கணக்கில் ரூ.1500 வரவு – பாஜக தலைவர் அண்ணாமலை!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரத்தை மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ளார். இந்நிலையில் பாஜக விற்கு வாக்கு வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி ரூ.1500 பொதுமக்கள் வங்கி கணக்கில் செலுத்தி உள்ளதாக கூறியுள்ளார்.
பொதுமக்கள் வங்கி கணக்கில் ரூ.1500 வரவு:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இந்த வகையில் தேர்தல் பணிகள் பல்வேறு விதிமுறைகளின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். இந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மாநகராட்சி, விருதுநகர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சிகளில் உறுப்பினர்களாக போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை மாநில தலைவர் அண்ணாமலை அறிமுகம் செய்து வைத்தார்.
SBI வங்கி வழங்கும் சூப்பர் பயிற்சிகள் – தொழில் தொடங்க திட்டமிடுவோருக்கு ஜாக்பாட் வாய்ப்பு!
இந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்தை மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்து உள்ளார். அந்த வகையில் அண்ணாமலை தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். மேலும் தற்போது திமுக பொய் கூற ஆரம்பித்துவிட்டது. திமுகவின் இந்த 8 மாத கால ஆட்சி 80 ஆண்டுகால ஆட்சி போல் தமிழக மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி உள்ளது என மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.மேலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டதில் மக்களை பல்வேறு வகையில் திமுக ஏமாற்றி உள்ளது எனவும் கூறியுள்ளார்.
IPPB இல் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் குறைப்பு – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் 55 லட்சம் கழிப்பறைகளை கட்டிக் கொடுத்தது மோடி அரசு. மேலும் மக்களை முதன் முதலில் வங்கி கணக்கு தொடங்க வைத்து மக்களுக்கு 500 ரூபாய் வீதம் மூன்று கட்டமாக 1500 செலுத்தியவர் மோடி.165 கோடி தடுப்பூசிகளை இலவசமாக செலுத்தி மக்களை கொரோனா என்ற நோய் தொற்றில் இருந்து காத்தவர் மோடி என அண்ணாமலை கூறினார். மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு வேண்டும் என்பதற்காக மக்கள் வங்கி கணக்கில் பிரதமர் மோடி ரூ.1500 செலுத்தியதாக அண்ணாமலை புதிய கதையை கூறியுள்ளார். இதை கேட்டு வாக்காளர்கள் வாய்விட்டு சிரித்து சென்றனர்.