கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.12,000 நிதியுதவி – மனு மீதான விசாரணை!
கொரோனா நிவாரண நிதிகளை மத்திய, மாநில அரசுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவில்லை என வழக்கறிஞர் விஜயகோபால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கொரோனா நிவாரணம்:
கொரோனா என்ற பெருந்தொற்று நாடு முழுவதும் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினசரி அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்பட்டது. நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அரசுகள் திணறியது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு கொரோனா வைரஸ் தொற்றை பேரிடர் என அறிவித்தது. மாநிலங்கள் தோறும் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.
தமிழக அரசின் 7 இலக்குகள் – முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!
மேலும் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் அங்குள்ள மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பேரிடர் மேலாண்மை மூலம் நிவாரண உதவிகள், உதவித் தொகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாயும், ஒரு வாரத்திற்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களுக்கு 12,700 ரூபாயும், பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு 60 ரூபாயும், குழந்தைகளுக்கு 45 ரூபாயும் நிவாரண உதவியாக 60 நாட்கள் வரை வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
கொரோனா தொற்றை பேரிடராக அறிவித்து 487 நாட்கள் ஆகியும் நிவாரண உதவிகள் ஏதும் வழங்கப்படவில்லை என வழக்கறிஞர் விஜயகோபால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பலியானவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை அடையாளம் கண்டு, விதிகளின்படி உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து நான்கு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.