தமிழக மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை திட்டம் – புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

0
தமிழக மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை திட்டம் - புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழக மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை திட்டம் - புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழக மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை திட்டம் – புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் அரசு பள்ளியில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டம் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பையும் பெற்றுள்ளது. தற்போது இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

உதவித்தொகை திட்டம்:

தமிழக அரசு பள்ளியில் பயில கூடிய மாணவிகள் பள்ளி படிப்போடு நிறுத்தி விடாது. அடுத்த கட்டமாக கல்லூரிகளில் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த முறை நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தின் போது தமிழக நிதியமைச்சர் 6 – 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம் சுமார் 6 லட்சம் மாணவிகள் ஆண்டுதோறும் பயன் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

மேலும் இத்திட்டம் மூலம் பெண்கள் தொடர்ந்து கல்வி பெற முடியும். அத்துடன் கல்வி இடைநிற்றல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற தகுதியான மாணவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. தற்போது இத்திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வு கட் ஆப் மதிப்பெண்கள் எவ்வளவு? தேர்வு வாரியம் அறிவிப்பு!

வழிகாட்டு நெறிமுறைகள்:

  • இந்த திட்டத்தை முழுமையாக ஆன்லைன் மூலம் மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும். மேலும் ஆன்லைன் வாயிலாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது மாணவியர் வங்கிகளில் கணக்கு தொடங்க உயர்கல்வித்துறை வழிகாட்ட வேண்டும்.
  • ஜூன் 30ம் தேதியில் இருந்து டிசம்பர் 31ம் தேதி வரையிலான ஆறு மாத காலம் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி படிப்பதற்கான சான்றுகளை வழங்க வேண்டும்.
  • இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற உள்ள மாணவிகள் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்றுள்ளார்களாக மேலும் தேர்ச்சி பெற்றது குறித்து பள்ளிக் கல்வித்துறை சரிபார்க்க வேண்டும்.
  • ஒவ்வொரு மாதமும் 7ம் தேதியில் வங்கி கணக்கில் ரூ. 1000 உதவித்தொகையை செலுத்த வேண்டும்.
  • இந்த திட்டத்தை செயல்படுத்த மாநில அளவில் திட்ட நிர்வாக குழு அமைக்கப்பட வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!