தமிழக கல்லூரி மாணவிகளுக்கான ரூ.1000 உதவித்தொகை – ‘இதற்காக’ தான் 2 நாட்கள் அவகாசம்!
அரசு பள்ளிகளில் பயின்று தற்போது உயர்படிப்பு படித்து கொண்டிருக்கும் மாணவிகள் ரூ.1000 உதவித்தொகை பெறும் விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தம் செய்ய விரும்பினால் இரண்டு நாட்களில் செய்து கொள்ளலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
ரூ.1000 உதவித்தொகை:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பு தொடர நினைக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறிப்பாக மாணவிகளின் இடைநிற்றலை தவிர்ப்பதற்காகவும், அரசு பள்ளிகளில் மாணவிகளின் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் தான் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், எக்கச்சக்கமான மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்திருந்தனர்.
Exams Daily Mobile App Download
இதனிடையே, மாணவிகள் விண்ணப்பிக்க ஜூலை 10 ஆம் தேதி வரைக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, ஜூலை 18 ஆம் தேதி வரைக்கும் ரூ. 1000 நிதியுதவி பெறும் திட்டத்திற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 3.58 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பித்துள்ளனர். இந்த கல்வியாண்டு முதலே மாணவிகளின் வங்கி கணக்கிற்கே ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பரவல் – மத்திய அரசின் புதிய குழு
இந்நிலையிலும் ரூ.1000 உதவித்தொகை பெறுவதற்காக வழங்கப்பட்ட விண்ணப்பங்களை திருத்தம் செய்துகொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்களில் திருத்தம் செய்துகொள்ள நினைப்பவர்களுக்காக இரண்டு நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பங்களுக்கான ஒப்புதல் திருத்தங்களை செய்ய கல்லூரி முதல்வர்களுக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.