தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை – மகிழ்ச்சி அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவது குறித்து மக்களிடையே அதிக எதிர்பார்ப்புகள் நிலவி வரும் நிலையில் விரைவில் அது குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.
அமைச்சரின் அறிவிப்பு:
தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அனைத்து கட்சிகளின் சார்பிலும் தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டது. திமுக உட்பட அனைத்து கட்சிகளும் பெண்களுக்கு உதவும் வகையில் பல சிறப்பு திட்டங்களையும் அறிவித்தனர். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கொரோனா உதவித்தொகை ரூ.4,000, அரசு பேருந்துகளில் மகளிற்கு இலவச பயணம், தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 உரிமை தொகை போன்ற அறிவிப்புகளை வெளியிட்டது. ஆட்சிக்கு வந்த பின்னர் சில முக்கிய திட்டங்களை அமலுக்கும் கொண்டு வந்தது.
CBSE 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பிரதமர் மோடி வாழ்த்து!
ஆனால், குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமை தொகை வழங்கும் திட்டம் பற்றிய அறிவிப்புகள் ஏதும் வெளிவராமல் இருந்தது. இதனால் அனைத்து தரப்பினரும் அரசுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து கோரிக்கைகள் வைத்தனர். பல அரசியல் கட்சி தலைவர்களும் தொடர்ந்து தமிழக அரசிடம் கேள்வி எழுப்பி வந்தனர். சமீபத்தில் சட்டபேரவை கூட்டத்திலும், பெண்களுக்கான மாத உதவித்தொகை குறித்த அறிவிப்புகள் ஏதும் இல்லை.
TN Job “FB Group” Join Now
இதனால் தமிழக மக்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்து பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 வழங்குவதற்கான அறிவிப்பை பற்றி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என்று தெரிவித்தார். மேலும், ஆண்களிடம் பணத்தை கொடுத்தால் முழுதாக அந்த பணம் வீடு வந்து சேராது என்பதால் தான் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெண்களிடம் தருகிறோம் என்று அமைச்சர் கூறினார்.