
அரசின் புதிய திட்டம்.. ஏழை பெண்களுக்கு ரூ. 1000 உதவித்தொகை – ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட மத்திய பிரதேசம்!
பெண்களுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று மத்திய பிரதேச மாநில முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்திற்காக அரசு ரூ. 60,000 கோடியை செலவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
ரூ. 1000 உதவித்தொகை:
இந்தியாவில் 2023ம் ஆண்டு மேகாலயா, நாகலாந்து, திரிபுரா, ராஜஸ்தான் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா உள்ளிட்ட 9 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுக்கான அரையிறுதி போட்டியாக கருதப்படுவதால் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates
நடப்பு வருடம் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தப்பட உள்ளதால் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரம் மக்களுக்கான வாக்குறுதிகளையும் தொடர்ந்து அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங், மாநிலத்தில் உள்ள ஏழை பெண்களுக்கு உதவும் வகையில் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்தியாவில் 10 ரூபாய் நாணயம் செல்லாது – பரவும் வதந்தி.. ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கை!
இதன் மூலம் ஏழை எளிய பெண்கள் வருடத்திற்கு 12,000 நிதி உதவியை பெறுவார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் மாநில அரசின் பிற திட்டங்களில் பயனடைந்து வரும் பெண்களும் இத்திட்டத்தின் மூலம் உதவித் தொகையை பெறலாம் என்றும் இத்திட்டத்திற்காக மாநில அரசு அடுத்த 5 ஆண்டுகளில் 60,000 கோடியை செலவிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.