ரூ.1000 உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கான மறுவாய்ப்பு – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் ரூ.1000 உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
ரூ.1000 உரிமைத்தொகை:
தமிழகத்தில் மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்.15 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 1.06 கோடி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், மீதமுள்ள 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் குடும்பத்தலைவிகள் மேல் முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Join Our WhatsApp
Group” for Latest Updates
அதாவது, செப்.18 ஆம் தேதி முதல் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த 30 நாட்களுக்குள் செய்யும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், தமிழகத்தில் ஏற்கனவே ரூ.1000 உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க 2 முறை வாய்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செப்.25 ம் தேதி மின்தடை – எந்த இடம் தெரியுமா? உடனே செக் பண்ணுங்க!
அதாவது, ஏற்கனவே ரூ.1000 உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்காமல் தவறவிட்டவர்களும் மேல்முறையீடு செய்ய வழங்கப்பட்ட காலத்திற்குள்ளாகவே விண்ணப்பிக்கலாம் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும், அடுத்தடுத்த மாதங்களில் வார துவக்கத்திலேயே குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.1000 வரவு வைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.