டோலோ-650 மாத்திரைகளை பரிந்துரை செய்ய ரூ.1000 கோடி ஊழல் – உச்சநீதிமன்றம் அதிரடி!
நோயாளிகளுக்கு பாராசிட்டமால் மாத்திரைகளை தான் வழங்க வேண்டும் என ரூ.1000 கோடி வரைக்கும் நிறுவனம் அள்ளி கொடுத்திருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
டோலோ-650:
அனைவரும் காய்ச்சலுக்காக பயன்படுத்தப்படும் டோலோ-650 எனப்படும் பாராசிட்டமால் மாத்திரைகளை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்ய சொல்லி மருத்துவர்களுக்கு ரூ.1000 கோடி வரைக்கும் டோலோ-650 நிறுவனம் பரிசுகளை அள்ளி கொடுத்திருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மத்திய அரசு 10 நாட்களுக்குள் இது குறித்து பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, கொரோனா கால கட்டத்தின் போதே அதிகளவில் நோயாளிகளுக்கு பாராசிட்டமால் மாத்திரைகள் தான் வழங்கப்பட்டு வந்தது.
இந்த மாத்திரைகளை தான் நோயாளிகளுக்கு வழங்க வேண்டும் என மருத்துவ நிறுவனங்கள் மருத்துவர்களை எச்சரித்துள்ளது. மேலும், பாராசிட்டமால் மாத்திரைகளை வழங்குவதற்கு மருத்துவர்களுக்கு சில இலவச சலுகைகளும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்திய மருத்துவ மற்றும் விற்பனைப் பிரதிநிதிகளின் கூட்டமைப்பு(FMRAI) மருந்துகளை பிரசாரம் செய்வதிலும் ஒரு தன்மை இருக்கிறது எனவும், வழிகாட்டு நெறிமுறைகள் வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் Double Tucker பஸ் – முழு விவரம் இதோ!
Exams Daily Mobile App Download
மேலும், எந்த நோய் வந்தாலும் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு டோலோ-650 மாத்திரைகளை வழங்குகின்றனர். மேலும், 2 மாத்திரைகளை போட வேண்டிய இடத்தில் 10 மாத்திரைகளை வழங்குகின்றனர். இதனால், நோயாளிகளின் உடல்நிலை மிகவும் பாதிப்படைவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், வழிகாட்டி நெறிமுறைகளை மீறும் மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதற்கான புதிய சட்டம் இயற்றும் வரைக்கும் உச்ச நீதிமன்றமே வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும் பொதுநலத்துறை அறிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்