சக பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம் – Air India நிறுவனத்திற்கு ரூ. 10 லட்சம் அபராதம்!
ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்ததாக அண்மையில் புகார் எழுந்தது. இது குறித்து விசாரிக்கப்பட்டு தற்போது ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபராதம்:
அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் சக பயணியின் மீது சிறுநீர் கழித்ததாக அண்மையில் புகார் எழுந்தது. இந்த விவகாரம் விமான பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் பயணி ஏர் இந்திய விமான நிறுவனத் தலைவருக்கு கடிதம் அனுப்பினார்.
Follow our Instagram for more Latest Updates
இதனையடுத்து இந்த பிரச்சனை பேச்சு வார்த்தையில் சுமுகமாக முடிக்கப்பட்டது. அதன் பிறகு இந்த விவகாரம் குறித்து விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை விசாரித்த இயக்குனரகம் சிறுநீர் கழித்த பயணியின் நடவடிக்கையை கண்டித்து 30 நாட்கள் விமானத்தில் செல்ல பயணிக்கு தடை விதித்தது. மேலும் இஏர் இந்தியா விமான சேவை இயக்குனருக்கு ரூ. 3 லட்சமும் நிறுவனத்திற்கு ரூ.30 லட்சமும் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா விமானம் முறையாக விமான போக்குவரத்து இயக்குனரகத்திற்கு புகார் அளிக்காததால் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் தற்போது ஏர் இந்திய விமான இயக்குநகரத்திற்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. மேலும் நடப்பு மாதத்தில் ஏர் இந்திய விமானத்திற்கு இது 2 – வது அபாரதம் என்பது குறிப்பிடத்தக்கது.