அதிக குழந்தைகளை பெறும் பெற்றோருக்கு ரூ.1 லட்சம் – மாநில அரசு அறிவிப்பு!
மிசோரம் மாநிலத்தில் மக்கள் தொகை வெகுவாக குறைந்து வருவதால் மக்கள் தொகை எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் அதிக குழந்தைகளை பெறும் பெற்றோருக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மாநில விளையாட்டு துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
மிசோரம்:
இந்தியாவில் 91% காடுகளை கொண்ட மாநிலமாக உள்ளது மிசோரம். இந்த மாநிலத்தில் சதுர கிலோமீட்டருக்கு வெறும் 52 பேர் மட்டுமே வசித்து வருகின்றனர். அதன்படி இந்தியாவில் அருணாச்சல பிரதேசத்திற்கு அடுத்த படியாக குறைந்த மக்கள் தொகையை கொண்ட மாநிலமாக மிசோரம் இருந்து வருகிறது. இதனால் மிசோரம் மாநிலத்தில் வகித்து வரும் மக்கள் பல துறைகளில் வளர்ச்சி அடைவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. மேலும் கடந்த 2011 ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு அடிப்படையில் மிசோரம் மாநிலத்தில் மக்கள் தொகையின் எண்ணிக்கை 10,91,014 ஆகும்.
தமிழக ஹோட்டல்களில் 50% பேர் அமர்ந்து சாப்பிட அனுமதி? அரசுக்கு கோரிக்கை!
தற்போது இதை போக்கும் வகையில் மாநில விளையாட்டு துறை அமைச்சர் ராபர்ட் ரோமவியா அவர்கள் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, மாநிலத்தில் அதிக அளவில் குழந்தைகளை பெறும் பெற்றோருக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை, சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் அவர் கூறியதாவது, மாநிலத்தில் குறைந்து வரும் மக்கள் தொகை மற்றும் கருவுறாமை விகிதம் பல ஆண்டுகளாக கவலை அளித்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
மிசோரம் மாநிலத்தில் மக்கள் தொகை படிப்படியாக குறைந்து வருவதால் பல துறைகளில் வளர்ச்சி அடைய முடியவில்லை. மக்கள் தொகை பெருக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக பெரிய குடும்பத்திற்கு தலைமை தாங்கி வரும் சியோனா சனா என்பவர் 39 மனைவிகள், 94 குழந்தைகள், 14 மருமகள், 33 பேரக்குழந்தைகளுடன் குடும்பத்தை நடத்தி வருபவர் மிசோரம் மாநிலத்தை சேர்ந்தவர் தான் என்று விளையாட்டு துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.