Microsoft நிறுவன ஊழியர்களுக்கு ரூ.1 லட்சம் போனஸ் – கொரோனா நிவாரணம்!
கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ரூ. 1.12 லட்சத்துக்கும் அதிகமான தொகையை நிவாரணமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இது நோய் தொற்று காலத்தில் மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும் என கருதப்படுகிறது.
நிவாரண உதவி
உலகின் மிக முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களுக்கும், 1.12 லட்சம் ரூபாயை தொற்று நோய் போனசாக வழங்க உள்ளது. முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி, கார்ப்பரேட் துணைத்தலைவர் பதவிக்கு கீழே உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் போனஸ் பரிசை அளித்து வருகிறது. இதில் பகுதிநேர தொழிலாளர்களும் அடங்குவர். தற்போது 1 லட்ச ரூபாய் நிவாரண அறிவிப்பை மைக்ரோசாப்டின் தலைமை மக்கள் அதிகாரி கேத்லீன் ஹோகன் இன்று (ஜூலை 9) வெளியிட்டுள்ளார்.
சென்னையில் ஜூலை 12ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்சார வாரியம் வெளியீடு!
இது அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவிள் தகுதி வாய்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும் என அறிக்கை தெரிவிக்கிறது. இந்த போனஸ் தொகைக்கு சுமார் 200 மில்லியன் டாலர் செலவிடப்பட உள்ளது. இத்தொகை மைக்ரோசாப்ட் நிறுவனம் சம்பாதிக்கும் லாபத்தில் இரண்டு நாட்களுக்கு குறைவானதாகும். மைக்ரோசாப்ட் உலகளவில் 175,508 ஊழியர்களைக் கொண்டு செயல்பட்டு வரும் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாகும்.
TN Job “FB Group” Join Now
இருப்பினும், அதன் துணை நிறுவனங்களான லிங்க்ட்இன், கிட்ஹப் மற்றும் ஜெனிமேக்ஸ் ஆகியவற்றின் ஊழியர்களுக்கு இந்த போனஸ் தொகை வழங்கப்படாது. இதற்கு முன்னதாக, பேஸ்புக் நிறுவனம் தனது 45,000 ஊழியர்களுக்கு தலா 1,000 டாலரும், அமேசான் நிறுவனம் அதன் முன்னணி தொழிலாளர்களுக்கு 300 நாட்களுக்கான விடுமுறை போனஸை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக மைக்ரோசாப்ட் தனது அலுவலகங்களை திறப்பதற்கு செப்டம்பர் மாதம் ஆகும் என அறிவித்துள்ளது.