RRB வேலைவாய்ப்பு: இந்திய ரயில்வேயில் மொத்தம் 2.65 லட்சம் காலிப்பணியிடங்கள் – விரைவில் அறிவிப்பு!
ரயில்வேயில் 2.65 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாகவும், சென்னையில் மட்டும் 9661 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் ராஜ்யசபாவில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
விரைவில் அறிவிப்பு:
கொரோனா காலகட்டத்தில் இந்தியா முழுவதும் வேலை இல்லாத திண்டாட்டம் நிலவி வந்தது. தற்போது தொற்று தாக்கம் குறைந்து வருவதால் அனைத்து துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய ரயில்வேயில் மண்டல வாரியாக 2,177 கெஜட்டட் பணியிடங்கள் மற்றும் 2,63,370 கெஜட்டட் அல்லாத பணியிடங்கள் உட்பட 2,65,547 பணியிடங்கள் விரைவில் நிரப்பபட உள்ளதாக ராஜ்யசபாவில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல் வெளியிட்டுள்ளார்.
TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – தேர்வர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
அந்த வகையில் சென்னையை தலைமையிடமாக கொண்டுள்ள மத்திய தெற்கு ரயில்வே கெஜட்டட் காலியிடங்கள் 161 மற்றும் கெஜட்டட் அல்லாதவை 9,500 காலியிடங்கள் உள்ளதாக ரயில்வே அமைச்சர் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். மேலும் காலியிடங்கள் ஏற்படுவதும், நிரப்புவதும் தொடர்ச்சியான செயல் என்றும், செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப ஆட்சேர்ப்பு முகவர்களுடன் ரயில்வே இணைந்து காலியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அவர் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – கார்டில் புதிய நபரின் பெயரை சேர்ப்பது எப்படி?
இதனை தொடர்ந்து ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மின்னஞ்சல் வழியாக 2 லட்சம் குறை தெரிவிக்கும் மனுக்களை பெற்றுள்ளது. இந்த நிலையில் விண்ணப்பதாரர்கள் தங்கள் குறைகளை பிப்ரவரி 16, 2022 வரை சமர்ப்பிக்கலாம். மேலும் இந்தக் குறைகளை ஆராய்ந்த பின்னர் குழு தனது பரிந்துரைகளை மார்ச் 4 க்குள் சமர்ப்பிக்கும் என்று ராஜ்யசபாவில் ரயில்வே அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.