RRB குரூப் D தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – PET தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு!
இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் கடந்த ஆகஸ்ட் மாதம் குரூப் D தேர்வை நடத்தியது. இந்த தேர்வின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் தற்போது அடுத்த கட்ட PET தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
RRB குரூப் D:
இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறையான ரயில்வே கடந்த ஆகஸ்ட் மாதம் 1,03,769 காலியிடங்களுக்கான RRB குரூப் D தேர்வை நடத்தியது. இந்த தேர்வானது கணினி வழியில் பல்வேறு கட்டமாக ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை நடைபெற்றது. இந்த எழுத்துத்தேர்வின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இந்த வாரம் முடிவுகள் வெளியாகலாம் என்று தகவல்கள் வந்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்த கட்டமாக உடல்நிலைத் தேர்வு (PET) நடத்தப்படும். இந்த PET தேர்வு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் RRB குரூப் D உடல்நிலை தேர்வு (PET) வரும் 2023 ஜனவரி மாதம் நடைபெறும் என்று ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் தெரிவித்துள்ளது.
TNUSRB PC Answer Key 2022 – வெளியீடு!
Exams Daily Mobile App Download
அதன் பிறகு மருத்துவ சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்கள் சரிபார்ப்பு போன்றவைகள் விரைவில் நடத்தி முடிக்கப்படும். இந்த அனைத்து கட்ட சரிபார்ப்பிலும் தகுதி பெற்றவர்கள் இறுதியாக 2023 ஏப்ரல் மாதம் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Download Notice – Click Here