RRB குரூப் D 2019 தேர்வு பிப்.23 முதல் தொடக்கம் – அதிகாரபூர்வ அறிவிப்பு!
ரயில்வே பணியாளர் வாரியம் RRC குரூப் D ஆட்சேர்ப்பு 2019 (நிலை 1 தேர்வு) தேர்வு தேதியை அறிவித்துள்ளது. இதன்படி தேர்வுகள் பிப்ரவரி 23 முதல் தொடங்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு தேதிகள்:
இந்திய ரயில்வே வாரியதில் உள்ள பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்காக ரயில்வே வாரியம் தேர்வுகளை நடத்துகிறது. இதன் மூலம் காலியிடங்களுக்கான பணியாளர்களை நியமனம் செய்கிறது. ஒவ்வொரு நிலை பதவிகளுக்கும் என்று தனியாக நிலை வாரியான தேர்வுகளை நடத்துகிறது. இந்நிலையில், கொரோனா கால சிக்கல்கள் காரணமாக கடந்த ஆண்டிற்கான இந்திய ரயில்வே வாரியத்தின் தேர்வுகள் நடத்தப்பட வில்லை. தற்போது நிலைமை சீரடைந்துள்ள நிலையில், அரசு பணியாளர் வாரியத்தின் தேர்வுகள் நடத்தப்படுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
Post Office இல் குழந்தைகளுக்காக சேமிக்கும் பெற்றோர்கள் கவனத்திற்கு – அருமையான திட்டம்!
ரயில்வே ஆர்ஆர்பி குரூப் டி 2019 நிலை 1 க்கான தேர்வு தேதி ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி, தேர்வு தற்காலிகமாக பிப்ரவரி 23 முதல் பல கட்டங்களில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை – rrbcdg.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். தேர்வு நகரம் மற்றும் தேதியைப் பார்ப்பது மற்றும் SC/ST விண்ணப்பதாரர்களின் பயண அதிகாரத்தைப் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு அனைத்தும் தேர்வு தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பு அனைத்து RRB இணையதளங்களிலும் சரியான நேரத்தில் கிடைக்கும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழப்பு – தலைவர்கள் இரங்கல்!
தேர்வு நடைபெறும் நகரம் மற்றும் தேதி அறிவிப்பின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள CBT தேதிக்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக தேர்வுக்கான நுழைவு சீட்டு கிடைக்கும். இதில், 4,85,607 விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் செல்லாத புகைப்படம் மற்றும் கையொப்பத்தின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டால், அந்தத் திருத்த இணைப்பு டிசம்பர் 15 முதல் 26 வரை RRB-களின் அனைத்து அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வுகள் கணினி அடிப்படையில் நடக்க இருப்பது என்பது குறிப்பிடத்தக்கதாகவும்.