“ராஜா ராணி 2” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – சந்தியாவின் அம்மா, அப்பாவை தெரிந்து கொண்ட சரவணன்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சந்தியாவின் ஐபி எஸ் கனவை சரவணன் நிறைவேற்றுவாரா என அனைவரும் எதிர்பார்த்து இருக்கும் நிலையில் சந்தியாவின் அம்மா அப்பா பற்றிய உண்மை சரவணனிற்கு தெரியவர போகிறது அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
ராஜா ராணி 2 ப்ரோமோ:
ராஜா ராணி 2 நல்ல ஒரு குடும்ப சீரியல் ஆகும். இந்த சீரியலில் சந்தியாவின் கனவை சரவணன் நிறைவேற்றுவாரா என ஒரு வரியில் சீரியல் கதை முடிந்தாலும் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி கதை இருக்கிறது. இந்த சீரியலில் சென்ற வாரம் முழுவதும் அர்ச்சனா செய்த தவறுகள் அனைத்தும் குடும்பத்திற்கு தெரியவர பரபரப்பான திருப்பங்களுடன் கதை சென்றது. அதன் பின் சீரியலின் மைய கதைக்கு நகர்ந்துள்ளது.
சந்தியாவின் அம்மா அப்பாவின் புகைப்படம் வர அதை பார்த்து சரவணன் அதிர்ச்சி அடைகிறார். குண்டு வெடிப்பில் சரவணன் அவர்களை காப்பாற்ற நினைத்து மருத்துவமனையில் சேர்க்க தன்னுடைய மகளின் கனவை பற்றி சந்தியாவின் அப்பா சரவணனிடம் சொல்கிறார். அப்போது சரவணன் சந்தியாவின் அப்பா அம்மாவை தான் நாம் காப்பாற்றி இருக்கிறோம் என நினைத்து தனது அப்பாவிடம் இது பற்றி சொல்கிறார். அவர் அதை கேட்டு அதிர்ச்சியில் இருக்கிறார்.
“நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – ரசிகர்கள் உற்சாகம்!
சரவணன் அன்று மார்க்கெட்டில் நான் காப்பாற்றியது சந்தியாவின் அப்பா அம்மா என சொல்ல சரவணனின் அப்பா அதை கேட்டு அப்போ உனக்கும் சந்தியாவிற்கு இடையே எதோ பூர்வஜென்ம பந்தம் இருப்பதாக சொல்கிறார். சந்தியாவின் அப்பா சொன்னது போல சந்தியாவின் கனவு என்ன என்பதை கேட்டு நீ நிறைவேற்ற வேண்டும் என சரவணனின் அப்பா சொல்கிறார். அதனால் சீரியல் அடுத்த கட்டத்திற்கு செல்ல இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.