‘பாரதி கண்ணம்மா’ நடிகை ரோஷினியின் புதிய திரைப்பட படப்பிடிப்பு – வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து சினிமா வாய்ப்புக்காக வெளியேறிய நடிகை ரோஷினி தற்போது ஊட்டி படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இது தொடர்பான வீடியோக்கள் வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை ரோஷினி
விஜய் டிவியில் கிட்டத்தட்ட 650 எபிசோடுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் பல்வேறு புதிய திருப்பங்களுடன் வெளியாகி வருகிறது. இந்த சீரியலில் சுமார் 3 ஆண்டுகளாக கண்ணம்மா என்ற முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இந்த சீரியலில் இவருக்கு கிடைத்த வரவேற்புகளை தொடர்ந்து கடந்த ஒரு ஆண்டாக பல்வேறு திரைப்பட வாய்ப்புகள் இவரை தேடி வந்திருக்கிறது.
‘பிக்பாஸ்’ சஞ்சீவ் முன்னணி நடிகையின் தம்பியா? இணையத்தில் வைரலாகும் தகவல்! ரசிகர்கள் ஷாக்!
என்றாலும் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படத்துக்காக காத்திருந்த நடிகை ரோஷினி, அதற்கான நேரம் அமையவும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார். இப்போது இந்த சீரியலில் ரோஷினிக்கு பதிலாக வினுஷா தேவி என்பவர் புதிய கண்ணம்மாவாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஊட்டியில் நடைபெற்று வரும் புதிய திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.
பாரதிக்கு அட்வைஸ் கொடுக்கும் வாய்தா வடிவுக்கரசி – ‘பாரதி கண்ணம்மா’ அடுத்த எபிசோடு!
அந்த வகையில் ஊட்டி மலைப்பிரதேசத்தின் அழகில் கண்ணம்மா ரோஷினியும் சேர்ந்து எடுத்துக்கொண்ட சில வீடியோக்கள் வலைதளங்களில் வெளியானது. இந்த வீடியோக்களை கண்ட ரசிகர்கள் வழக்கம் போல அதனை வைரல் செய்து வருகின்றனர். இது தவிர நடிகை ரோஷினி நடித்து வரும் திரைப்படம் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில், விரைவில் அந்த அறிவிப்புக்காக கண்ணம்மா ரோஷினியின் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.