“பாரதி கண்ணம்மா” சீரியல் ரோஷினி ஹரிப்ரியன் தவறவிட்ட படவாய்ப்புகள் – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் 600 எபிசோடுகளுக்கு மேல் நடித்த ரோஷினி ஹரிபிரியன், வெள்ளித்திரையில் பல வெற்றிப்படங்களில் வந்த வாய்ப்பை வேண்டாம் என மறுத்து இருக்கிறார்.
ரோஷினி ஹரிபிரியன்:
தமிழ் சீரியல்களில் முன்னிலையில் தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியல் இருக்கிறது. 2 ஆண்டுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான கண்ணம்மாவாக ரோஷினி ஹரிபிரியன் நடித்து வந்தார். அவருக்கு நடிப்பு துறையில் இது தான் முதல் வாய்ப்பு. தன்னுடைய முதல் சீரியலில் சிறந்த நடிகையாக மக்கள் மனதில் இடம் பிடித்த அவர் சமீபத்தில் சீரியலில் இருந்து விலகுவதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். அதற்கு சரியான காரணம் எதுவும் தெரியவில்லை.
மக்கள் மனம் கவர்ந்த டாப் 5 சீரியல் கதாபாத்திரங்கள் – “பாரதி கண்ணம்மா” வினுஷா தேவி முதலிடம்!
இந்நிலையில் ரோஷினி தனது கடைசி எபிசோடுகளை நடித்து முடித்து படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி பின் கிளம்பினார். அவருக்கு பின் அவரை போலவே வினுஷா தேவி என்பவர் நடித்து வருகிறார். அவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் சீரியலை தொடர்ந்து முதலிடத்தில் வைத்திருக்கிறார். ரோஷினி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு பல முக்கிய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது என தகவல் ஒன்று கசிந்துள்ளது.
தமிழகத்தில் புத்தாண்டை முன்னிட்டு புதிய கட்டுப்பாடுகள் அமல்? சென்னை மாநகராட்சி ஆலோசனை!
அவர் சூர்யாவின் ஜெய் பீம் படத்தில் செங்கேணி வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதன் பிறகு, ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மாவாக நடிக்க முதலில் ரோஷினிக்கு தான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் ஏதோ சில காரணங்களால் அவரால் அதில் நடிக்க முடியவில்லை. அவர் சீரியலில் நடித்ததால் இந்த படங்களில் நடிக்க முடியவில்லை. அதனால் கூட சீரியலில் இருந்து விலகி இருக்கலாம் என தகவல் ஒன்று பரவி வருகிறது.