மீண்டும் பாரதி கண்ணம்மாவில் இணையும் ரோஷினியின் தற்போதைய நிலை – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி யில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில் மிகவும் பிரபலமான மற்றும் அதிகளவில் பார்வையாளராகளை கொண்ட சீரியல் என்றாலே அது பாரதி கண்ணம்மா தான். வரக்கூடிய எபிசோடுகளை பார்க்கும் போது கூடிய விரைவில் பாரதியும் கண்ணம்மாவும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் பழைய கண்ணம்மா என்ட்ரி கொடுக்க போவதாக தகவல் வெளியாகி பரபரப்பை உண்டாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா:
விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் ஆரம்பத்தில் அதிகளவில் ரசிகர்களை ஈர்த்தது மட்டுமல்லாமல் தொடர்ந்து தொடரை ஆதரித்து டி.ஆர்.பி யில் முதலிடத்தை பெரும் ஒரு நாடகமாக வலம் வந்த நிலையில் தற்போது டி.ஆர்.பி யில் பின்னடைந்து வருகிறது. ஏனெனில் ஆரம்ப காலகட்டத்தில் பல பல திருப்பங்களுடனும், ஸ்வாரஸ்யங்களுடனும் நகர்ந்தது. ஆனால் சமீப காலமாக ஒரே கதையை சுற்றியே சீரியல் ஒளிபரப்பாகிறது. அதுமட்டுமல்லாமல் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி சீரியலை விட்டு திடீரென விலகியதை தொடர்ந்து பல கதாபாத்திரங்களும் சீரியலை விட்டு விலகினார்கள்.
மீண்டும் புதுப்பொலிவுடன் ‘கனா காணும் காலங்கள்’ – 90’s கிட்ஸ்களுக்கு ஹாப்பி நியூஸ்!
அதன் பிறகு குழந்தைகள் ஹேமா மற்றும் லட்சுமி மூடலமாக சீரியல் சூடுபிடித்தது. தற்போது புது புது முகங்களும் தொடரில் நியூ என்ட்ரி கொடுத்து கதைக்களம் எதிர் பாரத வகையில் நகர்கிறது. இந்நிலையில் பாரதிக்கு சிறந்த மனிதநேய மருத்துவர் என்கின்ற விருது வழங்கப்படுகிறது. அந்த விருதினை லக்ஷ்மி மற்றும் ஹேமா இருவரின் கைகளால் வாங்குகிறார். இதனை தொடர்ந்து விக்ரம் தொடங்கவுள்ள புது மருத்துவமனையில் பாரதி தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக சேர்ந்துள்ளார். அதே மருத்துவமனையில் கண்ணம்மா அட்மின் ஆபிசராக பணியில் சேர்ந்துள்ளார்.
எனவே நாள்தோறும் பாரதியும் கண்ணம்மாவும் ஒருவொருக்கொருவர் பார்க்கும் சூழ்நிலை அமையும். இதன் மூலம் கூடிய விரைவில் இருவரும் இணையவும் வாய்ப்புள்ளது. மேலும், தற்போது சீரியல் விறுவிறுப்பாகவும், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புகளுடனும் நகரும் நிலையில் சீரியலை விட்டு விலகிய பழைய கண்ணம்மா ரோஷினி மீண்டும் சீரியலுக்கு ரீ என்ட்ரி கொடுக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அதிகாரப்பூரவமாக இன்னும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.