பழநி மலைக்கோயிலில் ரோப்கார் சோதனை ஓட்டம் – கோயில் நிர்வாகம்!
பழநி மலைக்கோயிலில் இயங்கி வந்த ரோப்கார்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சோதனை ஓட்டம் செய்யப்பட்டது.
ரோப்கார்:
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பின்னர் முதல்வர் முக ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதிகளை அமல்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு அதற்கான அரசாணைகளையும் வெளியிட்டு வருகிறார். அதன்படி, தமிழகத்தில் உள்ள 5 மலைக் கோயில்களில் ரோப்கார் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுகள் தமிழகத்தில் நடந்து வருகிறது.
மெட்ரோ நியோ ரயில் திட்டம் சாத்தியக்கூறுகள் ஆய்வு – மத்திய அரசிடம் கோரிக்கை!
முதல்கட்டமாக சோளிங்கர் நரசிம்மர் கோயில், திருநீர்மலை முருகன் கோயில், திருச்சி உச்சிபிள்ளையார் கோயில், திருத்தணி முருகன் கோயில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் ஆகிய 5 கோவில்களுக்கு ரோப் கார் வசதி செய்வது பற்றிய ஆய்வு பணிகள் நடந்து வருகிறது என்று தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் மலைக்கோயில் செல்ல தெற்கு கிரி வீதியில் இருந்து ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த ரோப்காரில் தற்போது வருடாந்திர பராமரிப்பு பணி நடந்து வருகிறது. ரோப்காரில் ரூ.2 லட்சம் மதிப்பிலான ஷாப்ட் இயந்திரம் பொருத்திய பின், ரூ.7 லட்சம் மதிப்பில் இரும்புக்கயிறு மாற்றப்பட்டுள்ளது. ரோப்காரில் பொருத்துவதற்காக நவீனப்படுத்தப்பட்ட பெட்டிகள் கொண்டு வரப்பட்டு, 2 பெட்டிகளை பொருத்தி தற்போது சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் வல்லுநர் குழுவினர் கொண்டு ரோப்கார் ஆய்வு செய்யப்படும். பின்னர், பக்தர்கள் பயன்பாட்டிற்கு ரோப்கார்கள் செயல்படுத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.