ரோல்ஸ் ராய்ஸ் கார் நுழைவு வரி விவகாரம் – விஜய், தனுஷை அடுத்து சங்கருக்கு சிக்கல்!
நடிகர் விஜய் மற்றும் தனுஷ் அவர்களை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் விவகாரத்தை தொடர்ந்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இறக்குமதி காருக்கான நுழைவு வரி செலுத்தி விட்டதாக கூறியதை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
நுழைவு வரி:
தமிழ் திரைப்படங்களின் பிரமாண்ட இயக்குனர் என கூறப்படும் இயக்குனர் ஷங்கர் 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ மாடல் சொகுசு கார் இறக்குமதி செய்திருந்தார். அதை கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய சென்றபோது, வணிக வரித் துறையிடம் நுழைவு வரி செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதை எதிர்த்து இயக்குனர் ஷங்கர் வழக்கு தொடர்ந்ததை அடுத்து 15 சதவீத நுழைவு வரியை செலுத்தி வாகனத்தை பதிவு செய்து கொள்ள உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மின்சார பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்!
15 சதவீத நுழைவு வரியை செலுத்தி காரை பயன்படுத்தி வரும் நிலையில் நுழைவு வரி செலுத்தும்படி 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி வணிக வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதன் காரணமாக பாக்கித் தொகை 37 லட்சத்து 40 ஆயிரத்து 979 ரூபாயை 2019ம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி செலுத்தியதாக கூறப்படுகிறது. அதை சரி பார்த்த பின்பு அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. வழக்கு குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று வணிக வரித்துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து அதிகாரிகள் சேகரித்து வருகிறார்களா என அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
TN Job “FB Group” Join Now
அதனை தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின் வணிகவரித்துறை உதவி ஆணையர்களை இணைத்து வாட்சப் குரூப் தொடங்கி அதன் மூலம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், வணிக வரித்துறை ஆணையர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ளதன் காரணமாகவும் கால தாமதம் ஏற்படுகிறது என்று கூறியதோடு உதவி ஆணையர்களிடம் தகவல் பெற்றவுடன் விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் அரசு வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்.