ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா வாழ்வில் இப்படி ஒரு சோகமா.. நின்றுபோன திருமணம் – ஏமாற்றிய காதலர்!
சன் டிவியில் முக்கிய தொடராக ஒளிபரப்பப்படும் சீரியல் ரோஜா. இந்த தொடரின் கதையை விட இதில் நடிக்கும் நடிகர்கள் மிக பேமஸ். இந்த தொடரில் நாயகியாக நடிக்கும் பிரியங்காவின் வாழ்வில் நடந்த சோக நிகழ்வு தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
ரோஜா பிரியங்கா:
தெலுங்கு சின்னத்திரையில் மூலம் தன் கேரியரை தொடங்கி தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு உள்பட ஒரு சில படங்களில் சிறிய ரோலில் நடித்து இருப்பார். ஆனால் இவருக்கு நல்ல ஒரு புகழை பெற்றுக்கொடுத்தது ரோஜா சீரியல் தான்.
Follow our Instagram for more Latest Updates
இவர் தமிழ் திரைத்துறைக்குள் நுழையும் முன்னர் தெலுங்கு நடிகர் ராகுல் என்பவரை காதலித்துள்ளார். மேலும் இவர்களுக்கு 2018 ஆம் ஆண்டு மே மாதம் நிச்சயமும் நடந்துள்ளது. ஆனால் திருமணம் நடக்கும் சமயத்தில் கேரியரில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக ராகுல் மலேசியாவிற்கு சென்றுள்ளார். மேலும் இவர்களுக்குள் சிறிய மனஸ்தாபம் ஒன்றும் நேர்ந்துள்ளது.
Exams Daily Mobile App Download
பிரியங்கா தன் காதலரை எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றும் அவர் கேக்கவில்லையாம். இதனால் அவர்களின் திருமணமும் நடக்கவில்லை. இதை பிரியங்காவே ஒரு பேட்டியில் கூறி இருப்பார். இவரை பற்றி வெளியான இந்த தகவல் இவரின் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.