சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் அடுத்த ட்விஸ்டு – கையில் ரத்த காயத்துடன் வீட்டுக்கு வரும் அனு!
தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் கையில் ரத்த காயத்துடன் வீட்டுக்கு வரும் அனுவிடம் அர்ஜுனின் அம்மா கேள்வி கேட்பது போல வெளியாகி இருக்கும் ப்ரோமோ ஒன்று ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
ரோஜா சீரியல்
சன் டிவியில் ஒவ்வொரு நாளும் பல்வேறு ஸ்வாரசியமான திருப்பங்களுடன் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒரு சூப்பர் ஹிட் சீரியல் ‘ரோஜா’. இந்த ‘ரோஜா’ சீரியல் இதுவரை சுமார் 1888 எபிசோடுகளாக வெளியாகி மக்களின் ஏகப்பட்ட ஆதரவுகளை சம்பாதித்து வருகிறது. இத்தொடரில் அனாதை பெண் ரோஜாவை எதிர்பாராதவிதமாக திருமணம் செய்து கொள்ளும் அர்ஜுன் காலப்போக்கில் அவரை தனது மனைவியாக ஏற்றுக்கொள்கிறார். ஆனால் ரோஜாவை வெறுக்கும் அர்ஜுனின் குடும்பத்தினர் அவரை வீட்டை விட்டு துரத்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
ஆனால் ரோஜாவுக்கு நடக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளிலும் அவருக்கு உறுதுணையாக இருந்து அவரை காப்பாற்றி வருகிறார் அர்ஜுன். இப்படிப்பட்ட கதைக்களத்துடன் வெளியாகி கொண்டிருக்கும் இந்த ‘ரோஜா’ சீரியலில் அம்மா பாசம், அனுவின் வில்லத்தனம், நீலாம்பரியின் பழிவாங்குதல் என அனைத்திற்கும் மத்தியில் தற்போது ஊர் திருவிழாவில் பரிவட்டம் கட்டுவதற்கு அர்ஜுனை ஊர்மக்கள் தேர்வு செய்திருப்பதாக கூறி குடும்பத்தார் அனைவரும் அவரை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இந்த விழாவுக்கு அர்ஜுன் வரப்போவதில்லை என்று அடம்பிடிக்க ரோஜா, அன்னபூரணி பாட்டி உட்பட வீட்டில் உள்ள அனைவரும் உணவு உண்ண மாட்டோம் என்று வீம்பு பிடிக்கின்றனர். கடைசியாக அர்ஜுன் கோவிலுக்கு வருவதாக ஒப்புக்கொள்ள அனு அங்கு வருவதற்கு விருப்பமிலை என்று கூறி விடுகிறார். இப்போது அர்ஜுன் குலதெய்வம் கோவிலுக்கு போவதை அனு மூலம் தெரிந்து கொள்ளும் நீலாம்பரி அவரை தீர்த்துக்கட்ட திட்டம் போடுகிறார். இதற்கிடையில் ‘ரோஜா’ சீரியலின் அடுத்தகட்ட கதைக்களத்திற்கான ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.
SBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – Sports கோட்டா மூலம் தேர்வு!
அதாவது, அர்ஜுன் மற்றும் சாண்டி இருவரும் மாறுவேடமிட்டு அனுவை மிரட்ட, கையில் காயத்துடன் அவர்களிடம் இருந்து தப்பி விடுகிறார் அவர். இப்போது வீட்டுக்கு வரும் அனுவின் கையில் இருக்கும் காயத்தை பார்க்கு அர்ஜுனின் அம்மா, நீ யாரையாவது கொலை செய்து விட்டாயா? அப்படி என்றால் போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிருக்க வேண்டும். ஆனால் வீட்டுக்கு வந்து தப்பு பண்ணிட்ட என்று கூறிக்கொண்டிருக்க அங்கு வரும் அர்ஜுன் சரியா சொன்னீங்க என்று அனுவை பார்த்து முறைப்பது போல வெளியான ப்ரோமோ ஒன்று ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.