சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட் – செண்பகத்திற்கு கிப்ட் வாங்க செல்லும் ரோஜா!
சன் டிவி “ரோஜா” சீரியலில் இரவு நீண்ட நேரமாகியும் ரோஜா வராததால் செண்பகம் வருத்தத்தில் இருக்கிறார். அணு வாங்கி வந்த கொடுத்த விலையுர்ந்த கிப்டை தூக்கி எறிகிறார்.
ரோஜா சீரியல்:
ரோஜா சீரியலில் செண்பகத்திற்கு பரிசு வாங்க ரோஜா செல்கிறார். அங்கே மாற்றுத்திறனாளி ஒருவரது மனைவி பிரசவத்திற்காக துடித்த நிலையில் ரோஜா அவருக்கு உதவி செய்ய மருத்துவமனைக்கு செல்கிறார். அந்த பெண்ணிற்கு குழந்தை பிறக்கும் வரை காத்திருக்கிறார். அதனால் இரவு நீண்ட நேரம் ஆகிறது. இரவு 9 மணிக்கு மேல் ஆகியும் ரோஜா வராததால் செண்பகம் வருத்தத்தில் இருக்கிறார். மேலும் அவரது மாமியார் கல்பனாவும் வருத்தத்தில் இருக்கிறார்.
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” இன்றைய ப்ரோமோ – கேள்விகள் நிறைய இருப்பதாக சொல்லும் கமல்!
ரோஜாவுக்கு போன் செய்தாலும் அது ஸ்விட்ச் ஆப் என வருகிறது, அதனால் அவர்கள் மேலும் கவலை அடைகின்றனர். ரோஜாவை எதிர்பார்த்து செண்பகம் காத்திருக்க அந்த நேரம் அனு நிறைய புடவைகள் மற்றும் நகை உடன் வீட்டுக்கு வருகிறார். அவர் அதை எல்லாம் எடுத்து காட்டுகிறார். செண்பகம் அதை கண்டுகொள்வதில்லை. பாட்டியும் அப்போது வந்து செண்பகத்தை கட்டாயப்படுத்துகிறார். ஆனால் செண்பகம் தனக்கு ஆடம்பரமான பொருள் மீது எல்லாம் ஆசை இல்லை என சொல்லி நகையை கீழே தட்டி விட்டு விடுகிறார்.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் இவர்தான் – வாக்குகள் பட்டியல்!
பின் ரோஜா மருத்துவமனையில் இருந்து வெளியே வர நீண்ட நேரம் ஆகிவிட்டதை உணர்கிறார். மேலும் அவரது போன் ஆப்பில் இருக்கிறது. அவர் செண்பகத்திற்கு கிப்ட் வாங்க கடை இருக்கிறதா என தேடுகிறார். அங்கே ஒரு கடை இருப்பதை பார்த்து உள்ளே செல்ல கடையை மூடி விடுகிறார்கள். ரோஜா சென்று அதை திறக்க சொல்கிறார். ஆனால் கடைக்காரர் எவ்ளோ பணம் வைத்திருக்கிறாய் என கேட்க 70 ருபாய் இருக்கிறது என காட்டுகிறார். 1000 ரூபாய்க்கு மேலே தான் கிப்ட் இருக்கிறது என அவர் சொல்ல, ரோஜா வளையலை கழற்றி கொடுக்கிறார். ஆனால் அவர் அதை வாங்க மறுக்கிறார். அதனால் ரோஜா ஏமாற்றத்துடன் அங்கிருந்து கிளம்புகிறார்.