சன் டிவி “ரோஜா” சீரியலில் அடுத்து வரும் திருப்பங்கள் – உற்சாகத்தில் ரசிகர்கள்!
சன் டிவியில் 1000 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியலான ரோஜா சீரியலில் கதையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதனால் சீரியல் பார்க்கும் ரசிகர்களுக்கு விறுவிறுப்பு கூடி இருக்கிறது.
ரோஜா சீரியல்:
அந்த காலம் முதல் சன் டிவி சீரியல் பார்க்க தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த வகையில் தற்போது உள்ள காலத்திற்கு ஏற்றார் போல பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றனர். அதில் மக்கள் மனம் கவர்ந்த ஒரு சில சீரியல்கள் TRPயில் பல மாற்றங்களை செய்துள்ளது. அதில் ஒரு சீரியல் தான் ரோஜா சீரியல். இந்த சீரியல் தொடங்கப்பட்டு 1000 எபிசோடுகளை கடந்து பல திருப்பங்களுடன் இன்னும் சுவாரஸ்யம் குறையாமல் ஒளிபரப்பாகி வருகிறது.
OTT ‘பிக் பாஸ்’ தமிழ் நிகழ்ச்சியில் களமிறங்கும் டாப் போட்டியாளர்கள் – ரசிகர்கள் உற்சாகம்!
இந்த சீரியலில், இதுவரை 2, 3 கதையாசிரியர்கள் மாறி உள்ளனர். ஒவ்வொரு கதாசிரியரும் தங்களது கற்பனையை பொருத்தி பல மாற்றங்களை செய்து வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தாலும் மக்கள் இன்னும் விறுவிறுப்பு குறையாமல் இந்த சீரியல் பார்த்து வருகின்றனர். இந்த சீரியலில் ரோஜா கேரக்டரில் பிரியங்கா நன்கரியும் அவருடைய ஜோடியாக அர்ஜுன் கேரக்டரில் சிபு சூரியன் நடித்து வருகிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமாவின் ரோட்டு கடை அனுபவம் – வைரலாகும் வீடியோ!
இந்நிலையில் ரசிகர்களுக்கு கூடுதல் விறுவிறுப்பு அதிகரிக்கும் வகையில் தற்போது கதையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன் படி ரோஜாவின் அம்மா செண்பகம் தன்னுடைய மகளை ஏற்றுக் கொள்ளும் தருணத்தில் தற்போதும் பிளாஷ்பேக் வந்துள்ளது. இதில் குழந்தைப்பருவத்தில் ரோஜா மற்றும் அணு இருவரும் வளர்ந்த விதம், அவர்கள் பிரிந்து ரோஜா அனாதை இல்லத்தில் வளர்ந்தது, அதற்குப்பிறகு அர்ஜுனை சந்தித்தது என எல்லாம் காட்டப்பட இருக்கிறது.