அனுவை மாடியில் இருந்து தள்ளி விட்டதாக ஒத்துக் கொள்ளும் ரோஜா – வெளியான ப்ரோமோ!
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “ரோஜா” சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
“ரோஜா” சீரியல்
சன் தொலைக்காட்சியில் பல வித ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வரும் “ரோஜா” சீரியலில் கடந்த சில நாட்களாக அர்ஜுன், ரோஜாவை சிறையில் இருந்து வெளியே கொண்டு வர பெரிதும் முயற்சி செய்து வருகிறார். ஆனால் பலர் அதற்கு எதிராக சதித்திட்டம் தீட்டி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க, ரோஜா இருக்கும் சிறையில் தான் சாக்ஷி மற்றும் செண்பகம் இருவரும் இருக்கின்றனர். அனு மற்றும் ரோஜா இருவரையும் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சாக்ஷி தற்போது வரை செயல்பட்டு வருகிறார்.
அதே போல் அனுவிற்கு அனைத்தும் மறந்து விடுகிறது. அவரை அர்ஜுன் தனியாக ஒரு இடத்தில் மறைத்து வைத்திருக்கிறார். அவர் மற்றும் இன்ஸ்பெக்டர் மட்டுமே செல்லக்கூடிய வகையில் அந்த இடம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் சாக்ஷி ஆட்களை ஏற்பாடு செய்து அனு இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க சொல்கிறார். அனுவை கண்டிப்பாக கொலை செய்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனை அறிந்து கொள்ளும் அர்ஜுன், சாக்ஷி அனுப்பிய ஆட்களை அடித்து விடுகிறார்.
TN Job “FB Group” Join Now
சாக்ஷி சிறையில் ரோஜாவை தலையில் அடித்து விடுகிறார். இதனால் ரோஜா ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர், ரோஜாவை விசாரணைக்கு கோர்ட்டிற்கு அழைத்து வருகின்றனர். அப்போது ரோஜா தான் அனுவை மாடியில் இருந்து தள்ளி விட்டதாக ஒத்துக்கொள்கிறார். இதனால் அர்ஜுன் அதிர்ச்சி அடைந்து விடுகிறார். இத்துடன் இன்றைய ப்ரோமோ முடிவடைந்து விடுகிறது