சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட் – பாட்டி இருக்கும் இடத்தை கண்டறியும் குடும்பத்தினர்!
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா தொடரில் நேற்று பாட்டியை காணவில்லை என மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உள்ளது. இந்நிலையில் தற்போது புதிய திருப்பமாக ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
ரோஜா சீரியல் ப்ரோமோ:
சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் ரோஜா சீரியல் பலரின் கவனத்தையும் ஈர்த்த ஒன்று. இந்த தொடரில் மூத்த நடிகர்கள் பலரும் நடிக்கின்றனர். வடிக்கரசி இதில் அர்ஜூன் பாட்டியாக நடித்து வருகிறார். டைகர் மாணிக்கம் மகள் ரோஜா சின்ன வயதில் தொலைந்து விட, அவள் சொந்த மாமா மகள் என தெரியாமல் கல்யாணம் செய்கிறார் ஹீரோ அர்ஜூன். அதிலிருந்து இந்த கதை தொடங்குகிறது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்துடன் இணைந்த கண்ணன் & ஐஸ்வர்யா ஜோடி – வெளியான புகைப்படம்!
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் சிறையில் இருந்து பாட்டி காணாமல் போனதால் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கிறது. அர்ஜுன் செல்லும் முன்பே பாட்டி சிறையில் இருந்து கிளம்பி சென்று விட்டார் என சொல்கிறார்கள். அதன் பிறகு மொத்த குடும்பமும் பாட்டியை தேடி அலைகிறது. அடுத்து என்ன நடைபெறும் என்ற எதிர்பார்ப்புடன் நேற்றைய எபிசோட் முடிவடைந்த இந்நிலையில் இன்று என்ன நடக்கும் என்பது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
TN Job “FB Group” Join Now
அதில் பாட்டியை கோவிலில் அனைவரும் தேடிக் கொண்டு இருக்கின்றனர். அப்போது பாட்டி கோவில் குளம் அருகில் அமர்ந்து இருப்பதை ரோஜா பார்த்து விடுகிறார். அனைவரையும் அழைத்து பாட்டி இருப்பதை பற்றி சொல்கிறார். அனைவரும் பாட்டியை வீட்டிற்கு வருமாறு அழைக்கின்றனர். ரோஜாவும் பாட்டியை வீட்டிற்கு வருமாறு அழைக்க பாட்டி அவரை தள்ளி விடுகிறார். நீ இருக்கும் வீட்டிற்கு நான் வரமாட்டேன் என பாட்டி சொல்கிறார். அதற்கு ரோஜா நான் வீட்டிற்கு வரமாட்டேன் என்று கூறுகிறார். இந்த ப்ரோமோ காரணமாக அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.