சன் டிவி “ரோஜா” சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட் – அனுவை பேசவைக்கும் முயற்சியில் ரோஜா!
சன் டிவி ரோஜா சீரியலில் இன்று அனு கோமாவில் இருப்பது போல நடிக்கிறார். இதனை எப்படியாவது குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என அர்ஜுனும், ரோஜாவும் முயற்சி செய்வது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
ரோஜா சீரியல்:
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அர்ஜுன், ரோஜாவை பிரிக்க அனு கோமாவில் இருப்பது போல நடிக்கிறார். பாட்டி அவரை முழு மனதுடன் நம்புவதால் வேறு வழியில்லாமல் அர்ஜுனும், ரோஜாவும் இருக்கின்றனர். இந்நிலையில் அனு உண்மையாக கோமா நிலையில் இல்லை என்று ரோஜாவிற்கு தெரிய வருகிறது.
முடிவுக்கு வரும் ஜீ தமிழ் “செம்பருத்தி” சீரியல் – வெளியான தகவல்!
அதை அர்ஜுனிடம் சொல்ல, எப்படியாவது அனு கோமாவில் இருப்பது போல நடிக்கிறார் என்பதை வெளியே கொண்டு வர வேண்டும் என அர்ஜுனும், ரோஜாவும் திட்டமிடுகின்றனர். யாரோ டைகர் மாணிக்கத்திடம் 15 நிமிடம் பேசி உள்ளதாக அர்ஜுன், ரோஜா பேசிக் கொண்டிருக்கின்றனர். அதை கேட்டு அனு பதட்டமடைகிறார். நாளையில் இருந்து அனுவை குணப்படுத்தி, பேச வைக்கிறது தான் என் வேலை என்று ரோஜா சொல்கிறார்.
TN Job “FB Group” Join Now
அனுவை அமர வைத்து அவர் முன்னால் சாம்பிராணியில் மிளகாயை போடுகிறார். அதை போட்டதும் அனுவிற்கு நெடி ஏறி இருமல் வருகிறது. அனு சமாளிக்க முயற்சி செய்ய, முடியாமல் இருமல் வருகிறது. இப்படி ப்ரோமோவில் காட்டப்படுகிறது. அடுத்து என்ன நடக்கும் என்பதை இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் விடீயோவை கிளிக் பண்ணுங்க!!
முட்டாள்கள் பார்க்கும் சீரியல் ரோஜா சீரியல். கடுகளவும் லாஜிக்கே இல்லாத சீரியல். கேஷை முடிக்க தெரியாத தத்தி லாயர் அர்ஜுன் தன் மகளேய கண்டு பிடிக்க தெரியாத முட்டாள் லாயர் ராஜேஷ் தூளிகூட அறிவே இல்லாத கிழவி வடிவுகரசி கடைசியில் என்ன சொல்ல வருகிறான் கூமுட்டை டைரக்டர்.