அனு வீட்டில் இருக்க ரோஜா போடும் கண்டிஷன் – இன்றைய “ரோஜா” சீரியல் எபிசோட்!
சன் டிவி ரோஜா சீரியலில் இன்று, அனு இந்த வீட்டில் தான் இருப்பார் என பாட்டி பிடிவாதமாக இருக்கிறார். உடனே அர்ஜுன் இந்த வீட்டில் இருக்க மாட்டோம் என சொல்லி தனது அப்பா, அம்மாவுடன் வெளியே செல்கிறார். இதனால் அனைவரும் வீட்டிற்குள் வர வேண்டுமானால் ஒரு கண்டிஷன் உள்ளது என ரோஜா சொல்கிறார்.
ரோஜா சீரியல்:
இன்று சன் டிவி ரோஜா சீரியலில், அனுவை பற்றி உண்மை தெரிந்த பின்னரும் பாட்டி அனு இங்கே தான் இருப்பார் என பிடிவாதமாக இருக்கிறார். அதனால் அர்ஜுன் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என சொல்லி தனது அப்பா, அம்மாவை அழைத்துக் கொண்டு வெளியே செல்கிறார். ரோஜா நாம் ஏன் வெளியில் போக வேண்டும் என சொல்லி அருகில் இருக்கும் எல்லோரையும் கூப்பிட்டு நியாயம் கேட்கிறார். அன்னபூரணி பாட்டி யாரோ ஒருவருக்காக சொந்த மகன், மருமகள், பேரனை வீட்டை விட்டு அனுப்பி விட்டார் என அக்கம் பக்கத்தினர் சொல்கின்றனர்.
இதை பார்த்த பாட்டி தன் குடும்ப மானமே போகிறது என பாட்டி வெளியே வந்து பேசுகிறார். சின்னச்சின்ன பிரச்சனைக்காக வெளியில் வந்தால் எப்படி என சொல்லி கல்பனா மற்றும் பிரதாப்பை உள்ளே போக சொல்கிறார். அர்ஜுன், ரோஜா உள்ளே வந்தால் தான் நாங்களும் வருவோம் என அவர்கள் சொல்கின்றனர். அதனால் பாட்டி அவர்களையும் வீட்டுக்குள் போக சொல்கிறார். வீட்டிற்குள் வந்த பின்னரும் பஞ்சாயத்து தொடர்கிறது. ஆனால் அனு இங்கே தான் இருப்பார் என பாட்டி பிடிவாதமாக இருக்கிறார்.
நாங்கள் நினைத்தால் கோர்ட்டில் அனு நடத்திய நாடகத்தை பற்றி வீடியோ உடன் நிரூபித்து சிறைக்கு அனுப்ப முடியும் என கூறுகிறார் அர்ஜுன். நாங்கள் அப்படி செய்யாமல் இருக்க வேண்டுமானால் சில கண்டிஷன் இருப்பதாக ரோஜா சொல்கிறார். இன்னும் இரண்டு நாட்களுக்கு சாப்பிடவே கூடாது, வீட்டிற்கு நாங்கள் அழைத்து வரும் கெஸ்டுக்கு சமைத்து கொடுத்து காலில் வீழ்ந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என சொல்கிறார். பாட்டி அதற்கு சம்மதம் தெரிவிக்கின்றனர்.
பின்னர் ரோஜா, பாட்டி தன்னை அனாதை என சொன்னதை நினைத்து வருத்தப்படுகிறார். மேலும் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையும் ஆதரவில்லாமல் தான் பிறக்கும் என சாபம் விட்டது பற்றி நினைத்து அழுது கொண்டிருக்கிறார். அவர் சோகமாக இருப்பதை பார்த்து அர்ஜுன் வந்து பேசுகிறார். நீ தான் இந்த குடும்பத்தின் வாரிசு என்பதை டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து நிரூபிக்க வேண்டும். அது உன்னுடைய அடையாளம் மட்டுமல்ல, பிறக்கப்போகும் நம் குழந்தைக்கான அடையாளம் என சொல்கிறார். அதற்கு ரோஜா சம்மதம் தெரிவிக்கிறார்.
TN Job “FB Group” Join Now
அர்ஜுனும், ரோஜாவும் பேசிக் கொண்டிருக்க அதை அனு கேட்டு விடுகிறார். ரோஜா தான் செண்பகம் மகள் என நிரூபித்து விட்டால் தான் சிக்கி விடுவோம். அதை தடுக்க என்ன செய்யலாம் என அனு திட்டமிடுகிறார். செண்பகம் தோற்றத்தில் இருக்கும் நர்ஸ் சரஸ்வதியை எப்படியாவது கண்டுபிடித்து இந்த வீட்டுக்குள் செண்பகமாக கொண்டு வரும்படி சாக்ஷியிடம் கூறுகிறார் அனு. அவர் வந்து நான் தான் மகள் என கூறி விட்டால் இனி என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது என திட்டம் போடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.