சன் டிவி ‘ரோஜா’ சீரியல் மாமியார் கல்பனாவின் ரியல் ஸ்டோரி – ரசிகர்கள் ஷாக்!
மாமியார் என்றாலே நெகட்டிவ் ரோல் தான் என்ற பெயரை மாற்றிய சில கதாபாத்திரங்களில் முக்கியான இடத்தை பிடித்துள்ள ரோஜா மாமியார் கல்பனாவின் வாழ்க்கையில் அவரின் பயணத்தை பற்றி இந்த பதிவில் கண்போம்.
ரோஜா மாமியார் கல்பனா:
சீரியலில் அதிக புகழை கதாநாயகிகள் பெறுவதற்கு முக்கிய கரணம் மாமியார் படுத்தும் பாட்டை பொறுத்துக் கொண்டு மருமகள் சாதிப்பதால் தான். இதனால் ரசிகர்கள் மத்தியில் மாமியாருக்கு நெகட்டிவ் வகையில் பெயரும், மருமகள் கதாபாத்திரத்திற்கு பாசிட்டிவ் பெயரும் பெற்றுத் தருகிறது. தற்போது தான் சீரியல்கள் மாமியார் மருமகள் சண்டையில் இருந்து சற்று வேறு பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் சின்னத்திரையில் நல்ல மாமியாராக பெயரெடுத்தவர் ரோஜா சீரியலில் மாமியாராக நடிக்கும் கல்பனா.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ ரசிகர்கள் கவனத்திற்கு – அக். 3 மாலை 6 மணிக்கு ஒளிபரப்பு தொடக்கம்!
இவர் சீரியலில் தனது மருமகள் ரோஜாவிற்கு முழு ஆதரவையும் தெரிவிப்பது போல் இருக்கும். இவர் சன்டிவியின் ஆஸ்தான சீரியலான மெட்டி ஒலி சரோ கதாபாத்திரத்தில் நடித்தவர். இவர், முன்னதாக வெள்ளித்திரையில் நடித்துள்ளார். அதிலும், விஜய்-அஜித் இருவரும் இணைந்து நடித்த ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் அஜித்க்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். 5 மொழிகளில் பிரபல நடிகையாக இருந்தவர். இவரது அண்ணன் சஞ்சய் வல்லி படத்தில் நெகடிவ் ரோலில் நடித்துள்ளார். அவரை பார்க்கவந்த காயத்திரியை இயக்குநர் சுரேஷ் மேனன் பார்த்து படத்தில் நடிக்க வைத்துள்ளார்.
பாரதி, கண்ணம்மாவை சேர்த்து வைக்க சௌந்தர்யா & வேணுவின் திட்டம் – இன்றைய எபிசோட்!
அதன்பிறகு, காயத்திரி அப்படியே சின்னத்திரையில் வெகு பேமஸாகி விட்டார். இவர் சின்னத்திரை இயக்குனர் ரவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு, குழந்தை பிறந்ததால் தொடர்ந்து 3ஆண்டுகள் நடிப்பில் இருந்து விலகி இருந்தார். மீண்டும் சன்டிவியில் ரோஜா சீரியல் மூலம் மறுபடியும் சின்னத்திரைக்கு வந்துள்ளார். சீரியலில் வயது முதிர்வான மாமியார் கதாபாத்திரத்தில் நடித்தாலும், 39 வயதான காயத்திற்கு பள்ளி செல்லும் வயதில் சிறு குழந்தை மட்டுமே உள்ளது.