சன் டிவி “ரோஜா” சீரியலில் களமிறங்கும் முன்னணி நடிகை – வெளியான புகைப்படம்!!
தமிழ் சின்னத்திரையில் தொடர்ந்து TRPயில் முன்னிலையில் இருக்கும் ரோஜா சீரியலில், பிரபல நடிகை நளினி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து ஒரு மணி நேரம் இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ள நிலையில் அதில் நளினி சிறப்பு விருந்தினராக நடிக்கிறார்.
ரோஜா சீரியல்:
சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ‘ரோஜா’ சீரியல் பலரது கவனத்தை ஈர்த்த முக்கியமான தொடர்களில் ஒன்றாகும். தற்போதைய சூழலில் தமிழ் சின்னத்திரை தொடர்களில் அதிக ரேட்டிங் பெறும் சீரியலும் இதுதான். ஒரு அனாதை பெண், பணக்காரர் ஒருவரை கான்ட்ராக்ட் மூலம் திருமணம் செய்து கொள்கிறார். இந்த திருமண பந்தத்தில் இணைந்த இருவருக்கும் நாளடைவில் காதல் உருவாகிறது. இதனிடையே நாயகி ரோஜாவை அழிக்க நினைக்கும் குடும்பத்திடம் இருந்து அவரை பாதுகாக்க நாயகன் அர்ஜுன் மேற்கொள்ளும் முயற்சிகளை மையப்படுத்தி ரோஜா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
விஜய் டிவி “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் களமிறங்கும் தொகுப்பாளினி பிரியங்கா – வெளியான தகவல்!!
மேலும் ரோஜா தான் இந்த குடும்பத்தின் வாரிசு என குடும்பத்திற்கு தெரியப்படுத்த பல முயற்சிகளை செய்கிறார் அர்ஜுன். ஆனால் அதை தடுக்க எல்லா வழிகளையும் செய்கிறார் அனு. பாட்டி அனுவை முழு மனதோடு தன் பேத்தி என நினைக்கிறார். அதை சாதமாக பயன்படுத்திக் கொண்டு பல லீலைகளை அனு செய்கிறார். பாட்டி ரோஜாவை நீ யாரும் இல்லாத அனாதை என சொல்ல, செண்பகம் தான் என் அம்மா என நிரூபிக்க பரிகாரம் செய்ய உள்ளதாக ரோஜா சொல்கிறார். அனு நானும் பரிகாரம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஹேமாவை கலாய்த்து தள்ளிய அஞ்சலி, வெளியான படப்பிடிப்பு தள வீடியோ – குவியும் லைக்குகள்!
இந்நிலையில் இந்த பரிகாரம் ஞாயிற்றுக் கிழமை ஒரு மணி நேரம் தாயே உனக்காக என மகா சங்கமம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை நளினி கலந்து கொள்ள உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த சீரியலில் வடிவுக்கரசி, ராஜேஷ், ஷர்மிளா போன்ற முன்னணி நடிகர்களும் நடித்து வருகின்றனர். இதற்கிடையில் ரோஜா சீரியலில் நடிகை நளினி அவர்கள் அறிமுகமாகவுள்ளார்.