நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் நடந்த துயர சம்பவம் – திரையுலகினர் இரங்கல்!
தமிழ் சின்னத்திரையில் நகைச்சுவை கலைஞராக அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரோபோ சங்கர். அவரது வீட்டில் இறப்பு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது குறித்து அவரது மனைவி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
நடிகர் ரோபோ சங்கர்:
விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி தன்னுடைய திறமையால் வெள்ளித்திரையில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகர் ரோபோ சங்கர். அவர் மனைவி kpyநிகழ்ச்சி மூலம் மக்களிடம் பரிட்சையம் ஆனவர். இந்த தம்பதிக்கு இந்திரஜா என்ற மகள் இருக்கிறார். அவர் நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் நடித்திருக்கிறார். அதில் அவருடைய கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் ரோபோ சங்கர் வீட்டில் பெரிய துயர சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
‘விண்ணைத்தாண்டி வருவாயா’ நடிகர் பிரதீப் கோட்டயம் திடீர் மாரடைப்பால் மரணம் – ரசிகர்கள் இரங்கல்!
அதாவது ரோபோ சங்கரின் மாமனார் சிதம்பர பாரதி தற்போது இறந்து இருக்கிறார். ஏற்கனவே பிரியங்கா ரோபோ சங்கரின் அம்மா இறந்த நிலையில் அவருக்கு அப்பா மட்டுமே இருந்தார். தற்போது அவரும் இறந்து இருப்பதால் ரோபோ சங்கர் குடும்பமே சோகத்தில் இருக்கின்றனர். இது குறித்து இந்திரஜா தனது சமூக வலைத்தளத்தில் தனது தாத்தா பற்றி பதிவு வெளியிட்டு இருக்கிறார். மேலும் பிரியங்கா ரோபோ சங்கர் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் தாயை இழக்கும் போது பாசத்தையும், தந்தையை இழக்கும் போது பாதுகாப்பையும் இழக்கிறோம். என்னுடைய கடைசி கடமையை முடித்துவிட்டேன். உன்னுடைய புருஷனை உன் கூடவே அனுப்பிட்டேன் அம்மா அவரை பத்திரமாக பார்த்துக் கொள் அவருடன் சண்டை போடாதே பாவம் அப்பா, இனி தெய்வங்களாக இருந்து எங்களை காப்பாற்ற வேண்டும் miss you அம்மா அப்பா என பிரியங்கா தனது பதிவை ஷேர் செய்து இருக்கிறார். அது குறித்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து இருக்கின்றனர்.