ஊரகப் பகுதிகளில் உள்ள சாலைகள் புதுப்பிப்பு ஒப்பந்த புள்ளிகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் உள்ள ஊர்ககப் பகுதிகளின் சாலைகளை புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.
சாலை பராமரிப்பு பணி:
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு? அரசுக்கு பரிந்துரை!
முன்னதாக 2020 டிசம்பர் 11ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்த நிலையில், கொரோனா காரணமாக மேலும் 6 மாதங்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் அவகாசம் அளிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதனால் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது குறித்து நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில், ஊரகப் பகுதிகளில் உள்ள சாலைகளை புதுப்பிக்க ஒப்பந்த புள்ளிகளுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், சாலைகளை புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ள விரும்புவோர் வரும் 28 தேதி முதல் ஜூலை 14-ம் தேதிக்குள் http://www.pmgsytenderstn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஜூலை 14ம் தேதி அன்று மாலை 4 மணி அளவில் ஒப்பந்தப்புள்ளிகளுக்கு ஒப்பந்தம் ஒதுக்கப்படும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.