தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் – குடியரசுத் தலைவர் உத்தரவு!
தமிழகத்தில் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி அவர்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்து உத்தரவிட்டுள்ளார். இவர் முன்னதாக நாகலாந்து ஆளுநராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய ஆளுநர்:
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக பன்வாரிலால் கோவிந்த் அவர்கள் ஆளுநராக பணியாற்றினார். இவருக்கு கடந்த வாரத்தில் பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது, பஞ்சாப் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் தமிழகத்திற்கு புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இவர் நாகலாந்து மாநிலத்தின் ஆளுநராக முன்னர் பணியாற்றி வந்தார்.
கிசான் திட்டத்தில் பயன் அடையும் விவசாயிகள் கவனத்திற்கு – இரட்டை பலன்கள் வாய்ப்பு!
ஆர்.என்.ரவி என்கிற ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி பிஹாரில் உள்ள பாட்னாவில் பிறந்தவர். இவர் இயற்பியலில் முதுகலை பட்டமும், பத்திரிகை துறையிலும் பணியாற்றியவர். 1976இல் இந்திய காவல் பணியில் சேர்ந்தார். அவருக்கு கேரளா பிரிவு ஒதுக்கப்பட்டது. அங்கு அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட கண்காணிப்பாளர், காவல் துணைத் தலைவர் உட்பட பல்வேறு பதவிகளில் பணியாற்றி உள்ளார். மத்திய புலனாய்வுத்துறை பணியின்போது, நாட்டில் சுரங்க மாஃபியாக்கள் உட்பட குற்றக் கும்பல்களுக்கு எதிராக பல ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டார்.
TN Job “FB Group” Join Now
இந்தியாவின் உளவுத்துறையான இன்டலிஜென்ஸ் பியூரோவிலும் இவர் பணியாற்றியுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் மத்திய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு உளவு அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணிக்காக நியமிக்கப்பட்ட கூட்டு புலனாய்வு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அவர் நாகாலாந்து ஆளுநராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது இரண்டு ஆண்டு கழித்து தமிழக ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.