ராஜீவ் காந்தி கால்நடை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.39,100/- || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!
ராஜீவ் காந்தி கால்நடை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (RIVER) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Assistant Professors பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- ராஜீவ் காந்தி கால்நடை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (RIVER) காலியாக உள்ள Assistant Professors பணிக்கு என 08 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
- Assistant Professors பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பனி சார்ந்த துறைகளில் ஏதேனும் ஒரு Post Graduate, B.V.Sc, A.H, Master Degree-யை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள்.
- Assistant Professors பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Pay Level of 10 படி குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
- Assistant Professors பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் SC / ST பிரிவினராக இருந்தால் ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.1000/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 13.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.