தமிழகத்தில் அதிகரித்து வரும் தக்காளி விலை? அரசு முக்கிய நடவடிக்கை!

0
தமிழகத்தில் அதிகரித்து வரும் தக்காளி விலை? அரசு முக்கிய நடவடிக்கை!
தமிழகத்தில் அதிகரித்து வரும் தக்காளி விலை? அரசு முக்கிய நடவடிக்கை!
தமிழகத்தில் அதிகரித்து வரும் தக்காளி விலை? அரசு முக்கிய நடவடிக்கை!

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுவதால் அரசு, இது குறித்து முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கனமழை:

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பரவலாக மழை தொடங்கி மாநிலங்கள் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த மே மாதம் கேரளாவில் தொடங்க ஆரம்பித்த தென்மேற்கு பருவமழை, அதனை தொடர்ந்து மகாராஷ்டிரா, மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் பெய்து பாதிப்புகளை ஏற்படுத்தியது. கனமழை காரணமாக அப்பகுதி மக்கள் இயல்பு நிலை மிகவும் பாதித்து சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து தமிழகத்திலும் கடந்த சில மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்து வருவதால் விவசாய நிலங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையான இழப்புகளை சந்தித்து வருகின்றனர். மேலும் இது குறித்து தமிழக அரசு உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் பெய்து வந்த தொடர் கனமழையின் காரணமாக தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்து உள்ளதால் தக்காளியின் சில்லறை விலை அதிகரித்து காணப்படுகிறது.

இந்தியாவில் தனியார் ரயில் திட்டம் அமல் – கட்டணத்தை நிர்ணயிக்க அரசு அனுமதி!

மேலும் இந்த விலையேற்றத்தால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைவான விலைக்கு தக்காளி விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் செயல்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் சிந்தாமணி நாம்கோ மற்றும் காஞ்சி மக்கள் அங்காடி முதலிய கூட்டுறவு பண்டகசாலைகள் நடத்தப்படும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைவான விலைக்கு விற்பனை செய்ய தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி ரூ.40 முதல் ரூ.42 வரை விற்பனை செய்யப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!