தமிழகத்தில் உயரும் வீட்டு வாடகை – பொதுமக்கள் அதிர்ச்சி! என்ன இவ்வளவா?
தமிழகத்தில் மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுடன் போராடி வரும் வேளையில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் முதல் வீட்டு வாடகை வரை உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
வீட்டு வாடகை உயர்வு:
தமிழகத்தில் கடந்த வருடத்தில் வேகமெடுத்து பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் தலைநகர் சென்னை கடும் நெருக்கடியை சந்தித்தது. பெரும்பாலும் அம்மாவட்டத்தில் தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தது. வேலைக்காக வெளியூர்களில் இருந்து வந்த மக்கள் இருந்து வேலை பார்க்க முடியாமாலும் தனது சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமலும் சிரமப்பட்டனர். அதன் பிறகு ஓரளவு நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கொரோனா கட்டுக்குள் வந்தது. அதனால் அரசு மக்களின் நலன் கருதி ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கினர்.
அனைத்து ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – 30ம் தேதிக்குள் இதை செய்யாவிட்டால் ஓய்வூதியம் கிடைக்காது!
அப்போது நிலவிய பண வீக்கத்தால் மத்திய மற்றும் மாநில அரசுகள் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியை அதிகரித்தது. ஒரு புறம் மக்கள் தொற்று நோயுடனும் மறுபுறம் விலை ஏற்றத்துடனும் போராடி வருகின்றனர். இந்த நிலையில் மக்கள் அதிகம் பணி தேடி செல்லும் சென்னையில் சொகுசு வீடுகளுக்கான வாடகை அதிகரித்துள்ளது. சென்னை அண்ணா நகரில் சொகுசு வீடுகளுக்கான வாடகை தொகை 56000 ரூபாயில் இருந்து 63,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் கோட்டூர்புரத்தில் சொகுசு வீடுகளுக்கான வாடகை தொகை 74,000 ரூபாயில் இருந்து 84,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
கிட்டத்தட்ட 14% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல பெங்களூர், ஹைதராபாத், மும்பை, உள்ளிட்ட பெரு நகரங்களில் சொகுசு வீடுகளுக்கான வாடகை உயர்த்தப்பட்டு வருகிறது. மும்பையில் வொர்லி பகுதியில் மட்டும் கடந்த 2 வருடங்களில் 18% வரை வாடகை உயர்ந்தபட்டுள்ளது. தொழில்நுட்ப நகரமான பெங்களூருவில் சொகுசு வீடுகளுக்கான வாடகை 56,000 ரூபாயில் இருந்து 65,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே போல ஹைதராபாத்தில் 15% வீட்டு வாடகை உயர்ந்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்