இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மீண்டும் முழு ஊரடங்கு அமலாகுமா? அச்சத்தில் பொதுமக்கள்!

0
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - மீண்டும் முழு ஊரடங்கு அமலாகுமா? அச்சத்தில் பொதுமக்கள்!
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - மீண்டும் முழு ஊரடங்கு அமலாகுமா? அச்சத்தில் பொதுமக்கள்!
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மீண்டும் முழு ஊரடங்கு அமலாகுமா? அச்சத்தில் பொதுமக்கள்!

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது .கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருவது, நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு உயர்வு:

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படியும், நோய் பாதிப்பு உள்ள பகுதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படியும், மேற்கண்ட மாநில அரசுகளின் சுகாதாரத் துறை செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத் துறை செயலாளர் கடிதம் எழுதி உள்ளார். இதற்கிடையே கொரோனாவை முழுமையாக ஒழிக்கும், ஒரு பகுதியாக தடுப்பூசி போடுவது அதிகரிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,847 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,32,70,577 ஆக உயர்ந்தது. கடந்த 24 கொரோனாவால் பாதிக்கப்பட்ட 14 பேர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,817 ஆக உயர்ந்தது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – புதிய அறிவிப்பு வெளியீடு!

மேலும் தொற்றில் இருந்து ஒரே நாளில் 7,985 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,82,697 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.64% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது. மேலும் சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.15% ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 63,063பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் 1,95,84,03,471 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 15,27,365 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!