அதிகரித்து வரும் கொரோனா தொற்று – மீண்டும் தீவிர ஊரடங்கு அமல்!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா தொற்று பரவும் விகிதம் அதிகமாகியுள்ளது. அதனை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று:
கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவில், வூகான் நகரில் இருந்து பரவிய கொரோனா தாக்கம் தற்போது உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இந்தியா, அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன் முதலிய நாடுகள் அதிகமான இறப்பு விகிதத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நோய் தாக்கத்தின் போது குறைக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை என பரவி வருகிறது.
சென்னையில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? தீவிர ஆலோசனை!
நோய் தாக்கத்தினை சீனா ஆரம்ப நிலையிலே கட்டுப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது சீனாவில் தென் கிழக்கு மாகாணமான புஜியனில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. புட்டியன் நகரில் உள்ள பள்ளியில் 36 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து புட்டியன் நகரில் அனைத்து பள்ளிகள் மூடப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Flipkart நிறுவனத்தின் 1,00,000 வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 15% அறிவிப்பு – முழு விவரம் இதோ!
புஜியன் மாகாணத்தில் மின்னணு பொருட்கள் உற்பத்தி மையமான ஜியாமென் நகரில், அண்மையில் 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. எனவே அந்த பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. புட்டியன், ஜியாமென் நகரங்களை தொடர்ந்து புஜியன் மாகாணம் முழுவதும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் திருமண நிகழ்ச்சிகள், பொது மக்கள் கூட்டம் கூடுவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.