தமிழகத்தில் திடீரென அதிகரித்த அரிசி விலை.. காரணம் என்ன? – அதிர்ச்சியில் மக்கள்!
இந்திய மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது அரிசி விலை அதிரடியாக உயர்ந்து இருக்கிறது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்
அரிசி விலை:
மக்களுக்கு எரிபொருள் விலை அடிப்படையில் அத்தியாவசிய பொருள்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு பொருள்களின் விலையும் உயர்ந்து கொண்டே வரும் நிலையில், தற்போது அரிசி விலையும் அதிகரித்து இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் பொன்னி அரிசி, பச்சரிசி, பாஸ்மதி அரிசி போன்றவை தற்போது விற்பனை செய்யும் விலையை விட ஒரு மூட்டைக்கு 300 ரூபாய் விலை அதிகரித்து இருக்கிறது. அதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? தமிழக அரசில் ரூ.20,000/- சம்பளத்தில் வேலை !
இதற்கு என்ன காரணம் என்பது குறித்து அரிசி ஆலை உரிமையாளர்கள் கூறுகையில், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து அரிசி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது அதிகரித்து இருக்கிறது என தெரிவித்துள்ளனர். மேலும் கர்நாடகாவில் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட இருப்பதாக தேர்தல் வாக்குறுதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அதிகமான நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த அறிவிப்பால் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படும் நெல் அளவில் தாக்கம் ஏற்படுகிறது.
Follow our Instagram for more Latest Updates
அதனால் தமிழகத்திலும் ஒரு கிலோ அரிசி விலை 2 ரூபாய் முதல் அதிகரித்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தஞ்சை மற்றும் அதனை சுற்றி இருக்கும் நெற்களஞ்சிய பகுதியில் நெல் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அது தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்திற்காக கொள்முதல் செய்யப்படுகிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் வர்த்தக ரீதியிலான பயன்பாட்டிற்கு பிற மாநிலங்களின் உதவி தேவைப்படுகிறது. அதனால் தமிழகத்தில் அரிசி பற்றாக்குறை காரணமாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் வரை விலை ஏற்றம் இருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது.