அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணயம் – அரசு அதிரடி!
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களான அரிசி, சர்க்கரை, பருப்பு முதலியவற்றின் விலை அதிகரித்தது. அதனை தொடர்ந்து இலங்கை அரசு விலையை நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
விலை நிர்ணயம்:
உலகம் முழுவதும் கொரோனா பரவல் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் நோய்தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மற்றும் நிவாரணம் வழங்குவதற்காகவும் இதுவரை 700 பில்லியன் ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டது. இதற்கிடையில் அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு முதலியனவற்றின் விலை பன்மடங்கு அதிகரித்தது.
WhatsApp புதிய அப்டேட் – ஆண்ட்ராய்டு மொபைல் டூ ஐபோன் Chat Migration!
அதன் காரணமாக அரிசி 2.5 மடங்கு விலை அதிகரித்து ரூ.140க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. பால் பவுடர் கட்டுப்பாட்டின் காரணமாக ரூ. 350 க்கு விற்கப்பட்ட பால் பவுடர் ரூ.1000 க்கு விற்கப்பட்டது. ஒரு கிலோ சர்க்கரை தற்போது ரூ. 240 க்கும், ஒரு கிலோ உளுந்தம் பருப்பு தற்போது ரூ.1050 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவற்றின் விலையை அரசு நிர்ணயித்துள்ளது.
தமிழக அரசு இட ஒதுக்கீட்டில் சிலம்பம் இணைப்பு? விளையாட்டுத்துறை தகவல்!
மொத்த விலையில் சர்க்கரை ஒரு கிலோ ரூ.116க்கும் சில்லறை வர்த்தகத்தில் ரூ.122க்கும் விற்கப்பட வேண்டும் என்றும் கீரை சம்பா அரிசியின் விலை ஒரு கிலோ ரூ.125 என்றும் சிவப்பு சம்பா அரிசி விலை ரூ.103 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிவப்பு நாட்டரிசி ஒரு கிலோ ரூ.98க்கு, பச்சரிசி ரூ.95க்கும் விற்கப்பட வேண்டும் என இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. அதிகப்படியான விலைக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.