தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வாட்ஸ் ஆப் வாயிலாக திருப்புதல் தேர்வு!
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்அப் வாயிலாக திருப்புதல் தேர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வினாத்தாள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இருக்கும் ‘வாட்ஸ்ஆப்’ குழுவில் பதிவிடப்பட்டு தேர்வு நடத்தப்படும்.
திருப்புதல் தேர்வு:
தமிழகத்தில் வேகமெடுத்து வரும் கொரோனா மூன்றாம் அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் முதலில் 1 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால் மாணவர்களுக்கு மட்டும் தொடர்ந்து வகுப்புகள் நடைபெற்று வந்தது.
Post Office இல் தினமும் ரூ.95 செலுத்துவதன் மூலம் ரூ.14 லட்சம் வரை பெறலாம் – முழு விபரங்கள் இதோ!
இந்த நிலையில் அரசு தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஜனவரி 19ம் நடைபெறவிருந்த திருப்புதல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் விடுமுறையை கருத்தில் கொள்ளாமல் வீட்டிலிருந்தே தேர்வுக்கு தேர்வுக்கு தயாராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
வார இறுதி முழு ஊரடங்கு உத்தரவு தொடரும் – தனியார் அலுவலகங்கள் 50% திறனில் திறப்பு!
இந்த நிலையில் சில பள்ளிகளில் ‘வாட்ஸ்ஆப்’ குழு வாயிலாக திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு பாடத்திலும் நடத்தி முடிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய ‘வாட்ஸ் ஆப்’ குழுவில் பதிவிடப்படும். அதனை பதிவிறக்கம் செய்து மதியம் 1.30 முதல் மாலை 4.30 மணிக்குள் தேர்வு எழுதுகின்றனர்.பிறகு விடைத்தாளை போட்டோ எடுத்து பி.டி.எப் வடிவில் ஆசிரியரின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு தனித்தனியாக அனுப்பி விடுகின்றனர். அடுத்ததாக மாணவர்களை பள்ளிக்கு நேரடியாக வரவழைத்து ஆசிரியர்களிடம் விடைத்தாள்களை ஒப்படைக்க மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.