தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு இயக்குநர் முக்கிய உத்தரவு!

0
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு இயக்குநர் முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு இயக்குநர் முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு இயக்குநர் முக்கிய உத்தரவு!

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களான 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு கடந்த 9ம் தேதி தொடங்கி நிறைவு பெற்றது. இந்த நிலையில் திருப்புதல் தேர்வு விடைத்தாள்கள் திருத்தம் முடித்து, மார்ச் 14 ஆம் தேதிக்குள் மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை வழங்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு அளித்துள்ளார்.

முக்கிய உத்தரவு:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளி கல்லூரிகள் கடந்த 2 வருடங்களாக மூடப்பட்டு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது. இதனால் மாணவர்களின் நேரடி கல்விமுறை அதிகமாக பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மாணவர்கள் பாதுகாப்புக்காக பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட வில்லை மேலும் கொரோனா நோய் பரவல் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு தடுப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டது. இந்த வகையில் மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது.

உக்ரைனுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்கும் உலக நாடுகள் – நீடிக்கும் பதற்றம்!

இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு, அனைத்து நாடுகளிலும் உள்ள பொதுமக்களுக்கு போடப்பட்டு வந்தது. இதன் பலனாக கொரோனா தாக்கம் குறையத் தொடங்கின. இதனால் மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தொடங்கின. இருப்பினும் மீண்டும் கொரோனா 3 வது அலை தொடங்கியது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. மேலும் பிப் 1 முதல் மீண்டும் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு பள்ளிகளில் நேரடியாக நடத்தப்படும் என்று கல்வித்துறை அறிவித்தது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சனிக்கிழமை விடுமுறை ரத்து!

இந்த அறிவிப்பு அடிப்படையில் திருப்புதல் தேர்வு இந்த மாதம் நடந்து முடிந்தது. இந்த திருப்புதல் தேர்வு வினாத்தாள் சமூக வலைதளத்தில் “லீக்”ஆனது, இதனால் திருப்புதல் தேர்வு சாதாரண தேர்வு ,இந்த மதிப்பெண் கருத்தில் கொள்ளப்பட மாட்டாது என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது.மேலும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் திருத்தி மதிப்பிடும் மதிப்பெண்கள் மறு திருத்தத்துக்கு வரும்போது கூடுதலோ, குறைவோ ஏற்படாத வகையில் விடைத்தாள்களை திருத்த வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தது. இந்த நிலையில் மதிப்பீடு செய்யப்பட்ட முதல் திருப்புதல் தேர்வு விடைத்தாட்களை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மார்ச் 14 ஆம் தேதிக்குள் வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!