தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் பயிற்சி – அதிகாரிகள் வலியுறுத்தல்!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் மாணவர்களுக்கு முறையான திருப்புதல் பயிற்சி கொடுக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருப்புதல் பயிற்சி:
தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதற்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் மாணவர்கள் நலன் கருதி அனைவரும் பள்ளிக்கு வர வேண்டாம் எனவும், தேர்வு எழுதுவதற்கு மட்டுமே வந்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்களுக்கான ரிவிசன் (Revision) தேர்வுகள் நடத்தப்பட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதனால் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக சிறிய அளவிலான தேர்வுகள் நடத்தப்பட்டு, பயிற்சிகளும் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் முடிவில், ‘இந்த ஆண்டுக்கான பள்ளி வேலை நாட்கள் குறைவாகவே காணப்பட்டது. அதிலும் தேர்தல் பணிகள் காரணமாக கற்பித்தல் பணிகள் தடைபட்டது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு தடை நீக்கம் – அரசுக்கு கோரிக்கை!!
எனவே அரசு அறிவிக்கும் வரையும் ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும். பாடங்களை நடத்த வேண்டும். அப்படி விடுமுறை அளிக்கப்பட்டாலும் மாணவர்களுக்கான கற்பித்தல் பணிகள் ஆன்லைன் வழியாக நடத்தப்பட வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு +2 மாணவர்களுக்கு குறைந்த நாட்களே பாடங்கள் நடத்தப்பட்டது. மாணவர்களுக்கான தேர்வு பயிற்சிகளும் குறைவாகவே கொடுக்கப்பட்டன. அதனால் தேர்வு எழுதும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவதற்கு ஆசிரியர்கள் முயற்சி எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.