10ம் வகுப்பு மாணவர்கள் கற்றல் திறன் அறிய திருப்புதல் தேர்வுகள் – தலைமை ஆசிரியர்கள் முடிவு!!
10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் கற்றல் திறனை அறிந்து கொள்வதற்காக பள்ளிகள் அளவில் திருப்புதல் தேர்வுகள் நடத்த உள்ளதாக தலைமை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
அரசு அறிவிப்பு:
கொரோனா நோய்த்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் அனைத்தும் தாமதமாக திறக்கப்பட்டது. இதனால் மாணவர்களுக்கான பாடங்களை ஆசிரியர்கள் துரித கதியில் நடத்தினர். இந்நிலையில் பாடங்களை குறுகிய காலத்தில் கற்பதற்கு மாணவர்கள் அதிக சிரமப்பட நேரிடும் என்று கருதிய தமிழக அரசு பொதுத்தேர்வு மாணவர்களுக்கான பாடங்களை 30% குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.
அரியர் தேர்வு ரத்து வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு – உயர்நீதி மன்றம் உத்தரவு!!!
பொதுத்தேர்வுகள் ரத்து:
குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களின் படி மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் சூழ்நிலையில் தமிழக முதல்வர் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளை ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவித்தார். இதனால் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பீடு முறையை செய்வதில் குழப்பம் நிலவுவதாக தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
திருப்புதல் தேர்வுகள்:
இதனால் கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் பருவத்தேர்வுகள் நடத்த இருப்பதாக அறிவிப்புகள் வெளியானதால் குழப்பமான சூழல் நிலவுகிறது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா அவர்கள், “10ம் வகுப்புக்கு திருப்புதல் தேர்வுகள் நடத்துவது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளிவரவில்லை. அந்தந்த பள்ளிகள் அளவில் மாணவர்களின் கற்றல் திறனை அறிவதற்காக 10ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படும்” என்று அறிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்